Saturday, November 5, 2016

பாரன் சமேதி (மரணத்தின் காவலன் , மந்திர சித்திகளை அருளகூடியவர்)

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

பாரன் சமேதி (மரணத்தின் காவலன் , மந்திர சித்திகளை அருளகூடியவர்)
***********************************************************************************

சீட்டு கட்டை பயன்படுத்தி பணத்தை வசீகரிக்கும் சிறு பிரயோக முறையை பற்றி தெரிந்துகொள்ள இந்த முகவரிக்கு www .srsti .org சென்று பாருங்கள்

பாரன் சமேதி பற்றி சிறு அறிமுகம் :
******************************************************
******************************************************

இவர் ""ஆப்ரிக்கன் வூடூ"" தேவதை ஆவார் .இவர் மரணத்தின் காவலன் ஆவார் . அனைத்து விதமான மருத்துவமும் பலன் அளிக்காமல் மரணத்தில் வாயிலில் இருக்கும் ஒருவரை காப்பாற்ற கூடியவர். சகல விதமான மந்திர சித்திகளை அளிக்கக்கூடியவர் .

 இவர் அனைத்து விதமான அதிஷ்டங்களையும் அருள கூடியவர் , குறிப்பாக சூதாட்டங்கள் மற்றும் புதையல்கள் போன்றவற்றில் மிக பெரிய வெற்றியை வழங்க கூடியவர் . இவர் காதல் மற்றும் களவி போன்ற விஷயங்களை ஆட்சி புரிகின்றார் , இந்த விஷயங்களில் இவர் ஒருவருக்கு மாபெரும் வெற்றியை அருள கூடியவர். இவர் 'ஆப்ரிக்க ஜீடி' பிரிவை சேர்ந்த தேவதை ஆவார். இப்போ நாம் 'ஜிடி' என்றால் என்ன என்பதை பார்ப்போம்

மனித வாழ்வில் மரணம் ஒரு நிச்சயமான மற்றும் முக்கியமான நிகழ்வு ஆகும் , அனைத்து மார்க்கமும் இந்த சத்தியமான நிகழ்வை பற்றி பல தத்துவங்களை போதிக்கின்றன.

மரணத்தின் பின்பு மனிதனின் நிலையை பற்றி அனைத்து மதங்களும் ( மார்க்கங்களும் ) , தன் தத்துவங்களை முன் நிறுத்தி வைக்கின்றன . 'ஆதி ஆப்ரிக்க வூடு' மார்க்கமும் இதற்கு விதி விலக்கு இல்லை.

மரணத்தின் பின்பு மனிதனை வழிநடத்த நூற்று கணக்கான தேவதைகள் 'ஆப்பிரிக்க வூடு' மார்க்கத்தில் உண்டு ; இந்த அனைத்து தேவதைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் ஆவார்கள் . இந்த நூற்றுக்கணக்கான தேவைதைகளை 'ஜிடி'கள் என்று ஆப்பிரிக்க தாந்திரீகர்கள் அழைப்பார்கள் .
இந்த ஜீடிகள் மிகுந்த சக்தி வாய்த்த தேவதைகள் ,மிகவும் அபாயகரமானவர்கள் ; இவர்களை மிகுந்த எச்சரிக்கை உடன் ஆவாகனம் செய்ய வேண்டும் . இவர்களின் உதவியை கொண்டு அனைத்து விதமான மந்திர சித்திகளையும் நாம் அடையலாம் , சகல விதமான செய்வினை கோளாறுகளையும் சரி செய்யலாம் . பேய்/பிசாசுகள் இவர்களை கண்டால் பயந்து நடுங்குவார்கள் , இவர்கள் அனுமதியுடன் அவர்களை ( பேய் , பிசாசுகளை ) நம் கட்டளைக்கு அடி பணிய செய்யலாம் .

இவர்களை கொண்டு நாம் மரணத்தில் வாயிலில் இருக்கும் ஒருவரை காப்பாற்றிவிடலாம் , என் முகநூல் நண்பர்கள் மற்றும் என் மாணவர்கள் குடும்பத்தில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் . மருத்துவர் கைவிட்ட பல நபர்கள் இவரின் அருளால் காப்பாற்றபட்டு உள்ளார்கள் . என்னை தொடர்ந்து பின் தொடரும் நண்பர்கள் வீட்டில் மரணத்தில் வாயிலில் இருக்கும் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் , ஒரு உயிர் காப்பாற்ற படலாம் ; இது ஒரு சேவை ஆகும் , எந்த ரூபத்திலும் நன்கொடை பெறபட மாட்டாது ( என் முக நூலில் என்னை பின்தொடரும் நண்பர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் ).

பொதுவாக ஜீடிகள் வழிப்பாடு மிகுந்த சந்தோஷமாக ( நகைச்சுவைகள் , ஆட்டம் , பாடம் ) கொண்டாடபடுகின்றது , நாம் மரணத்தை சந்தோசமாக அரவணைக்க வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகின்றது.
மரணத்தில் பின் வாழ்க்கை தொடருகின்றது அதேபோல் ,களவி மூலமாக வாழ்க்கை தொடரப்படுகின்றது ஆதலால் ஜிடிகள் களவியை கொண்டாடுவார்கள் , இவர்களை பூஜையின் பகுதியாக களவி சம்பந்தமான நகைச்சுவைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது . பொதுவாக ஜிடிகள் முக்காலத்தை உணர்த்தும் ஆற்றல் உடையவர்கள் . இவர்கள் பிரபஞ்சத்தின் பல இரகசியங்களை வெளிக்கொண்டு வந்து இவர்களை வழிபடுவோர்களுக்கு கற்று தருவார்கள்.

நூற்றுகணக்கான ஜீடிகளில் "30" ஜீடிகள் பிரதானமானவை , இந்த "30" ஜீடிகளில் 'பாரன் சமேடி' பிரதானமான 'ஜீடி' ஆவார். இவர் மிகவும் அபாயகரமான தேவைதையாகும் , இவரை மிகுந்த மரியாதையுடன் வழிபடவேண்டும் முன்னே நாம் ஜீடிகள் பற்றி பார்த்த அனைத்து விஷயங்களும் இவர்க்கு பொருந்தும் . இவரின் மிக விசேஷமான மற்றும் முக்கியமான சக்தி நமக்கு அதிஷ்ட வருவாயை அருள்வது . எலிகுவாவை போல் இவரும் நாற்சந்தியில் அதிதேவதையாகும் , எலிகுவா தேவதைகளுடன் நமக்கு தொடர்பு ஏற்படுத்துவார் ,ஆனால் இவர் பேய் பிசாசுகளை வழிநடத்தும் தேவதையாகும் இவர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படுத்துவார் . சுருக்கமாக இவர் பொதுவாக ஒரு நீண்ட தொப்பி/ கருப்பு நிற ஆடை/ கையில் புகைப்பான்/ மது ரசம்/ நிறைந்த ஒரு கோப்பையுடன் காட்சி அளிப்பார்.

**சீட்டு கட்டும் பாரன் சமேடியும்**
************************************************

சீட்டு கட்டு இவருக்கு பிரியமான ஒரு வஸ்துவாகும் , இவர் சீட்டுகட்டை பயன்படுத்தி விளையாடும் அனைத்து விதமான விளையாட்டுகளையும் விரும்புவார் , இதை பயன்படுத்தும் நபர்கள் இவரை வழிபட்டால் மிகுந்த சந்தோசத்துடன் இவர்களுக்கு அருள் புரிவார்.

சீட்டு கட்டை ஒரு சாதாரண விளையாட்டு கருவியாக நினைத்து விடவேண்டாம் , இது முக்காலத்தை உணர்த்தும் 'ஆருட' கருவியாகும் , இதை நாம் ஒரு மந்திர கருவியாகவும் பயன்படுத்தலாம் . இது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் , ஆனால் இதுதான் உண்மை 'ட்ரொட்' என்று சொல்லப்படும் 'ஆருட' சீட்டுகளை விட இது மிகுந்த சக்தி வாய்ந்த கருவியாகும் . இந்த சீட்டுக்கட்டை 'பாரன் சமேடி' அருளால் பல தரபட்ட 'இஷ்ட சித்தி' பிரயோக முறைகளில் பயன்படுத்தி பார்த்து உள்ளேன் , நான் நினைத்ததைவிட பலன்கள் அற்புதமாக நடக்கின்றது .

எண்களை சுமக்கும் இந்த சீட்டுகள் எப்படி? நம் ஆசைகளை நிறைவேற்றும் ? , சுருக்கம்மாக இதற்கு விடை சொல்ல வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையின் பிரதானமான சில விஷயங்களை நீங்கள் கவனித்தால் உங்களுக்கு புரிந்து விடும் ; அதாவது தரம்/காலம்/அளவு போன்ற விஷயங்கள் எண்கள் என்ற அச்சாணியை கொண்டே இயங்குகின்றன , நாம் மனமும் இந்த எண்கள் என்ற அளவீடு கொண்டே மேலே சொல்லபட்ட அனைத்து விஷயங்களையும் கிரகிக்கின்றது . எண்கள் இல்லா வாழ்க்கையை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது.

கீழே கொடுக்கபட்டு இருக்கும் படங்கள் நான் சீட்டுக்கட்டை பயன்படுத்தி பணத்திற்கான கோரிக்கையை 'பாரன் சமெடி'க்கு வைக்கும் பொழுது எடுத்தவை ஆகும்.

குறிப்பு :
************

இவர் முக்காலத்தையும் உணர்த்தும் தேவதை /சீட்டுக்கட்டு ஆருடம்/ மட்டும் அல்ல , மற்றைய ஆருட முறைகள் பயன்படுத்தும் பொழுதும் இவரை ஆவாகனம் செய்தால் நாம் காலத்தின் அனைத்து சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளலாம்

கீழே நீங்கள் படத்தில் பார்க்கும் மர பெட்டியில் சுருக்கமாக இவரை வழிபட , மற்றும் ஆருடம் பார்க்க தேவையான பொருள்கள் வைக்கபட்டுள்ளது . இந்த பெட்டியில் வெளிப்பகுதியில் , மற்றும் உள்ளேயும் ( நடுவில் ) இவரின் யந்திரம் பதிக்ககட்டு இருக்கின்றது என்பதை காணுங்கள் .


கிழே கொடுக்கபட்டு இருக்கும் *பாரன் உருவம்*, *இயற்கை கற்களால்* உருவாக்கபட்டது( வர்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளது ) ஆகும் , இது அவரின் அருளாலே பல மாதங்களாக எனக்கு இவை கிடைக்க பட்டது , இவைகள் எனக்கு முதலில் கிடைக்கும் பொழுது எதற்காக எனக்கு அருளபட்டது என்று என்னால் உணர முடியவில்லை , திடீர் என்று ஒரு நாள் என் சொப்பனத்தில் ஒரு பாரன் உருவத்திற்கு நான் பூஜை செய்வதை போல் காட்சி தோன்றியது , இந்த உருவம் நான் கண்டு எடுத்த கற்களால் செய்யபட்டு உள்ளது என்பதை நான் உணர்ந்தேன் , விழித்த உடன் அதை நான் பாரணை அப்படியே கண்டு எடுத்த கற்களை கொண்டு செய்து பார்த்தேன் , கனவில் பார்த்த <பாரன்> உருவம் வந்ததை கண்டு வியந்து போனேன் .

நீங்கள் காணும் மண்டை ஓடு ஒரு விஷேச கல்லினால் செய்யப்பட்டதாகும் , இந்த மண்டை ஓட்டின் கண்கள் 'ஓபல்' என்று சொல்லபடும் கல்லினால் பதிக்கபட்டு உள்ளது .









ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&