Thursday, November 10, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-6

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-6
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

5. <இன்றைய கேள்வி>.

"இலுமினேட்டிகள்" ( என்னும் யூதர்கள் ) மற்றவரை அடிமையாகி தன்னை மேன்மை படுத்தி கொள்கிறார்களா ?

நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் , survival of the fittest என்ற கோட்பாட்டை கேள்விபட்டு இருப்பீர்கள் , இது இயற்கையின் நியதி . பிரபஞ்சம் பரிணாமத்தில் வளர்ச்சி அடைத்து கொண்டிருக்கின்றது , இதை போல் மனிதனும் மென்மையான பரிணாமம் பெற வேண்டும் , பலவான் ( உடலாலும் மற்றும் மனத்தாலும் ) மற்றவரை அடிமைபடுத்த வேண்டும் என்பது தேவைற்றது , மற்றவர்கள் தானாக இவர்களிடம் அடிமையாகி விடுவாரக்ள் . இவர்களை பற்றி குறை கூறுவதை விடுத்து , நாம் எப்படி மேன்மை அடைய வேண்டும் என்பதை சிந்தித்து அதன் வழி பயணிப்பதே சிறந்தது ஆகும்

இங்கே நம் தேசத்திலும் ஞானத்தால் ஏற்றம் பெற்ற ஒரு சமூகம் பிறரை அடக்கி ஆளுகின்றது என்று கூறி பல மார்க்கங்கள் உருவாக்கி உள்ளதை நீங்கள் நினைவு கூற்ந்து பாருங்கள் .

இலுமினேட்டி பாம்பு ( நாக ) குறியீடு
**************************************

பாம்பு குறியீடு எங்கு உள்ளத்ததோ அங்கே மிகுதியான சக்தி பிரவாஹம் மிகுதியாக இருக்கும் என்பதை நாம் முன்னே பதிவில் பார்த்தோம் .
நீங்கள் சூட்சுமமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதாவது எங்கு இந்த இரண்டு செழுமை மற்றும் அழிவின் இயக்க சக்தி மிகுதியை வெளிப்படுகின்றதோ அங்கு பாம்பின் பிரபஞ்ச சக்தி மிகுந்த ஏற்றத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது என்று பொருள் கொள்ள வேண்டும் .
கீழே கொடுக்க பட்டு இருக்கும் ட்ரொட் மந்திரவாதி சீட்டு இந்த இலுமினேட்டி குறியீட்டின் பல இரகசியங்களின் இருப்பிடமாக அமைந்துள்ளது .
இந்த ட்ரொட் சீட்டை பற்றி நான் பல பக்கங்கள் எழுதலாம் அனால் இது சரியான தருணம் அல்ல , இங்கே நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மந்திர ஆற்றலை வெளிப்படுத்த நாகத்தின் இயக்க சக்தி முக்கியமான ஒன்று எனபதை .

ஒரு உதாரணம் :
*****************
புல்லுருவிகள் என்று சொல்லப்படும் தாவரங்கள் விதை இல்லாமல் மரங்களில் மேல் படரக்கூடியது , இது அந்த செடியை நாசம் செய்து தன்னை செழுமைபடுத்தி கொள்ளக்கூடியது , இதை சரியாக பிரயோகம் செய்தால் மனிதனும் இந்த மூலிகைகளின் சக்திகளை வெளிகொண்டு வந்து தன்னை செழுமைபடுத்தி கொள்ளலாம் .

ஆவின் புல்லுருவி என்று சொல்லப்படும் கோரோசனை பசுவிற்க்கு தீங்கு விளைவிக்க கூடியது , ஆனால் இது மனிதனுக்கு மிகுந்த நன்மை அளிக்க கூடியது

இந்த புல்லுருவிகள் பாம்பின் இயக்கத்தை மிகுதியாக வெளிப்படுத்துவதை காணுங்கள் . இந்த புல்லுருவிகள் அடிப்படை சக்தி இதன் இயக்க செய்யலின் ( பாம்பின் -நாக சக்தி ) காரணத்தால் தான் வெளிப்படுகின்றது.
என் வாழ்வில் நான் செய்யும் அனைத்து செயல்களிலும் ஏற்றம் தரும் பல சத்ய குறியீடுகள் , பிரயோக முறைகளை பின்பற்றிவருகின்றேன், அதில் நான் நன்மை அடைந்த பின்பே நண்பர்களுக்கு , மாணவர்களுக்கு வெளிப்படுத்துவேன் ஏட்டு சுரைக்காய் மேல் எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை

உச்சிஷ்ட பிம்பத்தில் பல புல்லுருவிகள் அடைக்கபட்டு உள்ளது , மற்றும் இந்த பிம்பத்தை சுற்றி புல்லுருவினாலே ஒரு நாக வளையம் போடப்பட்டு உள்ளதை நீங்கள் படத்தில் கவனியுங்கள் , இந்த பிம்பத்திலும் மற்றும் என் பாடத்திலும் சமயம் , மதம் கடந்து பிரபஞ்ச இயக்கத்திர்ற்கு முக்கியத்துவம் தருவேன் என்பதை என் மாணவர்கள் நன்கு அறிவார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்

கீழே கொடுக்கபட்டு இருப்பது (பிரயோக முறையில் ) ""இலுமினேட்டி குறியீடு"" அல்ல , இது ""ஆப்பிரிக்க வூடூ குறியீடு"" என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் . இங்கே நான் ஒன்றை உங்களுக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன் இலுமினேட்டி குறியீடுகள் என்று அழைப்பது ஒரு பெயர் பிரயோகம் தான் நான் முன்னே கூறியதே போல் இலுமினேட்டி என்றால் வெளிச்சம் கொடுப்பர்வர்கள் என்று அர்த்தம்.

*********************************************************************************
நாம் செய்யும் அனைத்து பிரயோக முறைகளிலும் வெற்றியை தரும் ""வூடூ குறியீடு"" கீழே கொடுக்கபட்டு உள்ளது
***********************************************************************************
இதை நீங்கள் வீட்டினுள்ளும் பிரயோகம் செய்யலாம் , ஆனால் ஆற்றங்கரையில் வரைந்து வழிப்பட்டால் மிகுதியான பலன்கள் நமக்கு கிட்டும் . இந்த குறியீட்டை செவ்வாய் கிழமைகளில் வரைந்து வழிபட்டால் மிகுதியான பலன்கள் நமக்கு கிட்டும்

நான் படத்தில் காட்டியதை போல் ஒரு குடுவையில் மழை நீர் , கடல் நீர் , ஊற்று தண்ணீர் அல்லது ஆற்று நீர் ( எதாவது ஒன்றை )சிறிது ஊற்றி விடவேண்டும் , பிறகு இந்த குடுவையில் துளசி செடிகளால் ( எந்த வகை துளசியாய் இருந்தாலும் பரவாயில்லை ) நிரப்ப வேண்டும் படத்தில் ஜாடி காண்பிக்கபட்ட இடத்தில இந்த ஜாடியை வைத்து விடவேண்டும்
இந்த பாம்பின் வால் பகுதியில் உங்கள் பெயரை எழுதிவிடவேண்டும் , அதன் மேல் ஒரு பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றிவிடவேண்டும் பிறகு பாம்பின் தலை பகுதியில் உங்கள் கோரிக்கையை எழுதி வைத்து விடவேண்டும் , அதன் மேல் ஒரு சிகப்பு நீர் மெழுகுவர்த்தியை ஏற்றி விடவேண்டும் , ஒரு கால்மணி நேரம் இந்த அமைப்பின் பக்கத்தில் அமர்ந்து உங்கள் கோரிக்கையை ஜபம் செய்ய வேண்டும் .இந்த பிரயோகத்தை நீங்கள் செவ்வாய் கிழமை அன்று செய்தால் மிகவும் உத்தமமான பலன்கள் கிட்டும்
கண்டிப்பாக உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்

குறிப்பு :

1.ஜாடிக்கு வர்ணம் பூச வேண்டும் என்பது அவசியம் இல்லை
2.இந்த குறியீட்டை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம் , ஆனால் கையால் வரைந்து பிரயோகம் செய்தால் பலன்கள் மிகுதியாக ஏற்படும்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&