Sunday, November 20, 2016

மிக கொடுமையான காலகட்டங்களில் இறை அருள் கிட்டிட கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

**********************************************************************************
மிக கொடுமையான காலகட்டங்களில் இறை அருள் கிட்டிட கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-2
**********************************************************************************

கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் யூதர்களில் மிக அற்புதமான கபால தாந்திரீகத்தில் உள்ள கடவுளின் (கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு , அதை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம் ) பெயர் ஆகும் , இது 'ஹீப்ரியூ' எழுத்தாகும் இந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்
தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு இறை அருள் கிட்டி உங்கள் வாழ்வு ஒளி மையமாக ஆகும்

பிரயோக முறை :-
*************************
முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடகிழக்கு தெசையை நோக்கி அமரவும்

1. வெண் குங்கலியம் கொண்டு தூபம் போடவும்

2. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய கடவுளின் பெயரை ( கா ஹெட் ) மனத்தில் சொல்லி கொண்டே , வலம் இருந்து இடமாக ஒவ்வொரு எழுத்துக்களையும் பார்த்தபடியே தியானம் செய்து ( உன்னிப்பாக எழுத்தின் வடிவத்தை தியானம் செய்யவும்-வெண்மை ( வெள்ளி போல் ஜொலிக்கும் ) நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) .

3. அனைத்து எழுத்துக்களையும் அவர் பெயரை மனத்தால் ஜபித்துக்கொண்டே பார்க்கவும்

4. இந்த மிகவும் சக்திவாய்ந்த எழுத்துக்களை பார்த்த பின்பு , உங்கள் கோரிக்கை நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதை சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் (அந்த சந்தோஷத்தில் மூழ்குங்கள் )
.
5. பிறகு வேறு எந்த வேலையும் செய்யாமல் நித்திரைக்கு சென்று விடவும்
அனைத்து விதமான ஏவல் வேலைகளால் , கிரக கோளாறுகள் காரணமாக நீங்கள் பாதிக்க பட்டு இருந்தால் இந்த பெயரின் பிரயோகம் அற்புதமான பலன்களை தரும்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&