Friday, November 11, 2016

அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றி பெற (இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-2)

 ஓம் நம சிவாய
&&&&&&&&&&&

 *****************************************************************************
அனைத்து  காரியங்களிலும் மகத்தான வெற்றி பெற (இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-2)
*******************************************************************************

பிரபஞ்ச சக்தியின் பூர்ண அருள்பெற்று நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ள இந்த பிரயோக முறையை தொடர்ந்து செய்து வாருங்கள்

வெள்ளி ,ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் காலை 6 மணிக்கு ( சூரிய உதய வேலையாக இருந்தால் மிகவும் உத்தமம்)இந்த பிரயோக முறையை நீங்கள் செய்ய வேண்டும் .

முதலில் இந்த யந்திரத்தை சாக்பீஸ் ( chalk  piece ) கொண்டு தரையில் வரையவும் , அல்லது பச்சை அரிசிமாவை கொண்டு வரையவும் , "9" வெள்ளை நிற மெழுகுவர்த்தியை ( சரியாக சூரியன் உதிக்கும் வேலையில்) இந்த யந்திரத்தின் மேலே வைத்து ஏற்றவும்.

நடுவில் உள்ள கோட்டின் மேல் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கவும் , பின்பு இந்த யந்திரத்தின் நடுவில் ஒரு குவளையில் சுத்தமான தேன் ஊற்றி வைக்கவும் .

பிறகு உங்கள் கைகளை முத்தமிட்டு வானத்தை நோக்கி உயர்த்தி , உங்கள் கோரிக்கையை கடவுளிடம் ( பிரபஞ்ச சக்தியிடம் ) பிராத்திக்கவும் நேர்மறையான சொற்களை பயன்படுத்தி பிராத்தனை செய்யவும் . பிரபஞ்சசக்தியின் பேராற்றல் உங்கள் உடல் முழுவதும் பரவட்டும் என்று பிராத்திக்கவும்  பிராத்தனை செய்த பிறகு இந்த யந்திரத்தின் பக்கத்தில் "3" முறை உங்கள் கைகளை கொண்டு கொட்டவும்

யந்திரத்தின் பக்கத்தில் அமர்ந்து அனைத்து  மெழுகுவர்த்தியும் அனையும் வரை உங்கள் ஆசைகளை பற்றி தியானம் செய்யவும் , குறிப்பாக உங்கள் கோரிக்கை  அனைத்தும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நடந்து முடிந்ததாக தியானம் செய்யவும். மெழுகுவர்த்திகள்  அனைத்தும் அனைந்த பிறகு , இந்த யந்திரத்தை குவளையில் உள்ள நீர் மற்றும் , தேன் கொண்டு அழித்து  விடவும் .

இந்த பிரயோகத்தை வாரம் '1' முறை [அ] மாதம் '1' முறை செய்யவும் , உங்கள் வாழ்வில் இறை அருள் சூழ்ந்து ,  அனைத்து  வித சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது உறுதி


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&