Sunday, November 20, 2016

யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1(வசியம்)


யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1(வசியம்)
*******************************************************************

*********************************************************************************
இரு நபர்களை ஒன்று சேர்க்க அல்லது நம் எதிரியை நம் வசம் அடிமையாய் இருக்க செய்ய
***********************************************************************************
இந்த யந்திரத்தை பிரயோகம் செய்யும் முன் வசியத்தை பற்றி சில தகவல்களை நாம் பார்ப்போம் ( புது தகவல் பொதுவாக சொல்ல படும் விஷயம் அல்ல )
அஷ்டகர்மங்களில் வசியம் மிகவும் முக்கியமான கர்மம் ஆகும் , இந்த ஒரு கர்ம வேலையை சித்தி செய்துவிட்டால் மற்றைய கர்ம வேலைகளை சித்தி செய்ய எளிதாகிவிடும்.
[ஆகர்ஷணம் , மோகனம் , வசியம்] இவை மூன்றுமே ஒரே மாதிரியான தன்மை உடையவைபோல் தோன்றலாம் . ஆனால் இவற்றுள் வேறுபாடு பிரயோகம் செய்யும்போதுதான் தெரியவரும். ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுக்கிறது.மோகனசக்தி மயங்கிவிடச்செய்கிறது .வசிய சக்தி தனது வசிகரத் தன்மையால் தான் சொன்னதைச் சொல்லி செய்ததைச் செய்யும் தன்மையுடையவர்களாய் மற்றவர்களை மாற்றிவிடுகிறது . வசியம் செய்பவர் மற்றவரை அடிமைப்படுத்தி விடுகிறார் என்று சொல்ல வேண்டும். அதாவது வசியம் செய்பவரின் எண்ணத்திற்கு மாறாக மற்றவர்களால் எதுவுமே செய்ய முடியாது . அதாவது கட்டளை இடுபவன் உத்தரவை ஏன் எதற்கு எனக் கேட்காமல் பின்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் நிறைவேற்றுவது ஆகும்.
இந்த வசியம் என்பது கண்களால் மனத்தினால் அல்லது சொல்லால் மற்றவர்களை அல்லது பொருள்களைத் தன்வயப்படுத்துவதாகும். அதாவது தன் சுயபுத்தி,சித்தம்,விருப்பம், மனோரதம் முதலியவற்றை அடக்கி அவைகளைச் செயல்படவிடாமல் தடுத்து வசியப்படுத்துபவனின் விருப்பம் கட்டளைக்கிணங்க நடத்தி வைப்பது வசியமாகும். இந்த வசிய சக்தியானது வசியபடுத்துபவனிடமிருந்து வசியத்திற்கு உள்ளாபவனுக்கு நம் விருப்பத்தினை அவன் மனதில் தோன்றச்செய்து அவனை நம் விருப்பப்படி செயல்படுத்தமுடியும்.
ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் உடல் மன பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்தரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் "ஹிப்னாடிஸத்தை" நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று "ரெய்கி மருத்துவம்" நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் "டெலிபதி" முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 'சீன யோக நெறி'யில் "ப்ராணிக் ஹீலிங்" போன்ற பயிற்சியங்களில் பிராணசக்தியை மனதை கொண்டு இயக்குவது பிரதானமான யுக்தியாக செய்யபடுகின்றது , இதன் மூலமாக தொலைவிலுள்ள நபரின் உடலில் உள்ள வியாதியை சரி செய்ய முடியும் என்று நிரூபித்தும் உள்ளார்கள் எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்த முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு தாந்திரீக பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது என் தாழ்மையான கேள்வி?
நீங்கள் வசிய பிரயோகம் 100 % வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் , பிரபஞ்சத்தில் உள்ள வசிய சக்தியை உங்களிடம் வசமாக்கி வைத்து கொள்ள வேண்டும் , எப்படி இரும்பு காந்தத்தை வைத்து தேய்த்த உடன் காந்தசக்தியை வெளிப்படுத்துக்கின்றதோ அதேபோல் இந்த வசிய சக்தியை நீங்கள் வசமாக்கி கொண்டால் , உங்களிடம் இருந்து இந்த வசியசக்தி பிரவாகமாக வெளிப்படும் , நீங்கள் சாதாரணமான மண்ணை சக்தி ஊட்டி , பிறர் மேல் வீசினாலும் அது சொக்குபொடி போல் வேலை செய்து பிறரை உங்களிடம் அடிமைபடுத்தும் , மனிதர்களை மட்டும் அல்ல செல்வத்தையும் வசியம் செய்யலாம் .
"ஹிந்து தாந்திரீகத்தில் நான் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை ( பிறருக்கு இதில் மாற்று கருத்து இருக்கலாம் , ஆனால் இது என் அனுபவம் ஆதலால் இதை நான் உங்களிடம் கூறுகின்றேன் ) என்னவென்றால் வசிய பிரயோக முறையில் வசிய சக்தியின் ஆணிவேர் கீழே நீங்கள் பார்க்கும் முக்கோண சக்கரத்தில் தான் இருக்கின்றது , மற்றும் அகோரமூர்த்திதான் வசிய சக்தியின் அதிதேவதை ஆவார் . நான் பல வருடங்களாக அகோரமூர்த்தி உபாசனை செய்து வருகின்றேன்.
இவரை நான் உபாசனை செய்ய தொடங்கிய பின் சில மாதங்கள் சென்றஉடன் ஒன்றை நான் கவனிக்க தொடங்கினேன் , என் எண்ணங்கள் அனைத்தும் ஒரு வித வசிய தன்மையுடன் செயல் படுவதை என்னால் தீர்க்கமாக உணர முடிந்தது என் ஆழ்மன ஆசைகள் அனைத்தும் நிறைவேறி உள்ளதை நான் சற்று யோசிக்கும் பொழுது தான் உணரமுடிந்தது . இது எனக்கு மிகுத்த உற்சாகத்தை கொடுத்தது .நான் பல தேவதைகளை உபாசனை செய்வதால் எனக்கு ஒரு சந்தேகம் உருவானது இது இவரால் அருளபட்டதா இல்லை வேறு தேவதைகளின் அருள்குடையா என்று , இதை உறுதிசெய்ய என் நெருங்கிய மாணவர் ஒருவரிடம் இந்த உபாசனை முறையை கற்றுகொடுத்தேன் , அவரும் இதை தினம்தோறும் செய்து வந்தார் , சில மாதங்கள் சென்றஉடன் அவருக்கும் என்னை போல் அவருக்கும் அவர் ஆசைப்படும் அனைத்து விஷயங்களும் நிறைவேறி வருவதாக கூறினார் . மற்றும் எனக்கு சில சகுனங்கள் மூலமாக இவரின் அருளதான் என்று உறுதிசெய்யப்பட்டு .
இவரை வழிபட தாந்திரீக சாஸ்திரத்தில் மற்றும் ஆகமங்களில் சில இரகசிய பிரயோக முறைகள் கொடுக்கபட்டு உள்ளது , அதை நாம் தினம்தோறும் பிரயோகம் செய்து வந்தால் வசிய சக்தி நம்மிடம் கண்டிப்பாக வந்துவிடும் என்பது நான் கண்ட உண்மை
உச்சிஷ்ட ஜபம் மாணவர்களுக்கு இந்த சக்தியை தன் வசம் ஆக்கிகொள்ள நாளைய பாடத்தில் சிறு பிரயோகமுறை ஒன்று சொல்லி தரபடும் இதை தினம்தோறும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் , நீங்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் வசியம் செய்யலாம் என்பது உறுதி

யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1
*******************************************************************

இரு நபர்களை ஒன்று சேர்க்க அல்லது நம் எதிரியை நம் வசம் அடிமையாய் இருக்க செய்ய
இந்த பூதங்களை வழிபட மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறைகள் உள்ளன ( மிகவும் சக்திவாய்ந்தது , ஆனால் விரிவானது ) , நான் கிழே கொடுத்து உள்ளது சுருக்க பிரயோக முறை
கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் 'யூத தாந்திரீகத்தில்' உள்ள பூதங்களின் ஒன்றான "ராவும்" பூதத்தின் குறியீடு ஆகும் (இந்த பூதத்தை போல் பல பூதங்கள் உண்டு ) , இந்த குறியீட்டை இதற்கு உரிய தேவதையான ராவுமே வெளிப்படுத்தியாக ஆகும் . இந்த யந்திரம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும் . இது நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்.
நீங்கள் முன் பதிவில் ( கடவுளின் பெயர் ) பார்த்ததை போல் பிரயோகம் செய்யலாம் ஆனால் படையல் மிகவும் முக்கியம் , பூதங்கள் நாம் எதையும் கொடுக்காமல் நமக்கு அருள்புரியமாட்டார்கள் , நாம் எதையும் கொடுக்காமல் அவர்களிடம் இருந்து காரியத்தை சாதித்து கொண்டால் , நம்இடத்தில இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளவார்கள் என்பது உறுதி
தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு இந்த பூதத்தின் அருள் கொடையினால் ""உங்கள் வாழ்வு ஒளிமயமாகும்"" ,நீங்கள் நினைத்தது நடக்கும்

பிரயோக முறை :-
*************************
முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடகிழக்கு தெசையை நோக்கி அமரவும்
1. சாம்பிராணி கொண்டு தூபம் போடவும்

2. படத்தின் இடது பக்கம் கருப்பு ( அல்லது ஊதா ) மெழுகுவர்த்தி வைக்கவும் , வலது பக்கம் சிகப்பு மெழுகுவர்த்தியை வைக்கவும்

3. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய பூதத்தின் பெயரை ( ராவும் ) மனத்தில் சொல்லி கொண்டே கருப்பு மேலுக்குவர்த்தியை ஏற்றவும்

4.கருப்பு மேலுக்குவர்த்தியை ஏற்றிய பின்பு பூதத்தின் பெயரை ( ராவும் ) மனத்தால் ஜபித்து கொண்டே யந்திரத்தை நன்றாக பார்க்கவும் ,

5.யாரை வசியம் செய்ய வேண்டுமோ ( அல்லது இரு நபர்களை சேர்க்க வேண்டுமோ ) அவரை நன்றாக மனத்தில் நிறுத்தி சிகப்பு மெழுகு வர்த்தியை ஏற்றவும்.

6.பிறகு யந்திரத்தை பார்த்தபடியே ( உன்னிப்பாக யந்திரத்தின் வடிவத்தை சிகப்பு நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) , பூத்ததின் பெயரை மனதால் ஜெபிக்கவும்

7.சிறிது நேரம் ஜெபித்த பின்பு கணைகளை மூடி கொண்டு , வசியம் செய்ப்பவரும் , நீங்களும் சந்தோசமாக் பேசிக்கொண்டு இருப்பதை போல் ( அல்லது அன்பை பரிமாறி கொள்ளுவதை போல் ) இது நடந்து ஏறியதை போல் தியானம் செய்யவும்.அந்த சந்தோஷத்தில் சற்று நேரம் மூழ்குங்கள்

8. பிறகு இந்த தேவதைக்கு இந்த பிரயோக முறைக்கான படையல்- (ஒரு குவளையில் தென் ) வைக்கவேன்டும்
.
9. ஐந்து நிமிடம் சென்ற பிறகு முதலில் சிகப்பு மெழுகுவர்த்தியை அனைக்கவும் , பிறகு கருப்பு மெழுகுவர்த்தியை அணைகவும் , படையல்பொருளான தேனை குடித்து விடவேண்டும்
இதை தினம் தோறும் செய்து வாருங்கள் , நீங்கள் நினைத்த படி அந்த நபர் உங்களிடம் வசியம் ஆவர் என்பது உறுதி









ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&