Tuesday, February 28, 2017

காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்...

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்கள்
********************************************************************************************************************************

இலவச பயிற்சி வகுப்பு -4( நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த காளி உபாசகர்களாக மாறுவது உறுதி )

இன்றைய பாடத்தில் :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1.தசமகா வித்யாகளின் முக்கியத்துவம்
2.காலத்தின் ( நாள் , கிழமை , நேரம் ) முக்கியத்துவம்
3.காலத்தை கணக்கில் கொள்ளாமல் தாந்திரீக பிரயோகம் செய்ய இயலுமா ?
4.ஹும் பீஜத்தின் முக்கியத்துவம்
5,ஹ்ரீம் பீஜத்தின் முக்கியத்துவம்
6.க்ரீம் ஹும் ஹ்ரீம் காளியின் பல மந்திரங்களில் ஒரு எளிமையான மந்திரம்
7.மூடர்களின் புரட்டுகள்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Witchcraft tantra lesson 50- pg 19 importance of psychological work





விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் - கோர் ஸ்கில்ஸ் -பாடம் -50 -மனோஇயக்கத்தின் முக்கியத்துவம் (விழிப்புணர்வு பதிவு )

பிரபஞ்ச ஆற்றல்கள் அண்டத்தில் எந்த அளவிற்க்கு  இருக்கின்றதோ , அதே அளவிற்க்கு தனி மனிதனிடத்திலும் ஏராளமாக தேங்கி கிடக்கின்றது . இந்த சக்திகளை நாம் சரியான தாந்த்ரீக யுக்திகளை கொண்டு வெளிக்கொண்டு வந்தால்  நம் வாழ்வில் நிகழும் அனைத்து விதமான கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் ; மற்றும் நம் ஆசைகள்  அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் .

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும் மனிதனிடத்திலும் இருக்கின்றன .

மகா சித்தர் ஸ்ரீ திருமூலர் அவர் திருமந்திரத்தில் உபதேசித்த இந்த பாடலை உணர்ந்தாள் , மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு , நம் வாழ்க்கையை நம் கையிலே எடுத்து , அதில் வரும் அனைத்து  வித கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து  சந்தோசமாக வாழலாம் :

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. திரு - 2188

இதன் பொருள் :

தானே தனக்கு பகைவனும் விரும்புபவனுமாய் இருக்கிறோம். தானே தனக்கு மறுமையையும் இம்மையும் உண்டாக்குகிறோம். தானே தன்னால் உண்டாக்கிய வினைப் பயனை அனுபவிப்பவனாகவும் இருக்கிறோம். இதை உணர்ந்து செயல்பட்டால் தானே தனக்கு தலைவனாகலாம். பின்குறிப்பு – தானே தனக்கு நண்பனும் பகைவனுமாய் இருப்பதை உணர்ந்து ஆளப் பழக வேண்டும்.

சொர்க்கமும் நரகமும் நம்மிடமே இருக்கிறது .ஏழ்மையும் செல்வமும் நம்மிடமே இருக்கின்றது .இவற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளாததால்தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன .மேலே சொல்ல பட்ட விஷயம் தான் ஒரு தாந்திரீகரின் அடிப்படை அனுபூதி படிப்பினை ஆகும்.நம்முள்ளே புதைத்து கிடக்கும் அதிசய ஆற்றல்களை கொண்டு நமக்கு வேண்டியதை பெற்று சுக வாழ்வு வாழலாம் .

இந்த சக்தியை பயன்படுத்த மகா சித்தர்கள் மற்றும் ரிஷிகள் பல யுத்திகளை தந்து அருளி  உள்ளார்கள் , இது சற்று கடினமாகத்தான் இருக்கும் , மருந்து என்றுமே கசக்க தான் செய்யும் . ஆனால் இதை உணராமல் சில மூடர்கள் தன் இச்சைக்கு ஏற்றால் போல சில கட்டுக்கதை பிரயோக முறைகள் ( மூல நூல் , முன்னோர்கள் போதனைகள் போன்றவற்றுக்கு புறம்பாக ) கற்று தந்து பலரை வழி தவற செய்கின்றார்கள் .

தவறான போதனையில் மிகவும் முக்கியமான ஒன்று புறப்பூஜைக்கு முக்கியதுவம் தந்து , அகம் (மனம் ) சார்ந்த சீரமைப்புகள் மற்றும் பிரயோக முறைகளுக்கு முக்கியத்துவம் தராதது . மனம் மாபெரும் சக்திகளின் பெட்டகமாய் திகழ்கின்றது , இதை சீர் செய்யாமல் புற க்ரியைகளுக்கு முக்கியத்துவம் தந்தால் நமக்கு எந்த வித நனமையும் நம்மக்கு கிட்டாது .

மனோ சக்திதான் நாம் செய்யும் க்ரியைக்கு எஜமானாக இருக்கின்றது . அதனால் நாம் செய்யும் கிரியைகளுக்கு மனோவியல் கட்டுமான அமைப்புகளை தெரிந்து அதை கொண்டு மனோ எழுச்சியை உருவாக்க வேண்டும் . இந்த மனோ இயக்கம்தான் நாம் செய்யும் க்ரியைகளுக்கு அடித்தளமாக , அமைகின்றது , அதை மேலும் மெருகுக்கேற்றும் செயல்தான் புற  கிரியைகள் என்பதை நாம் உணரவேண்டும் .

இன்றைய பாடத்தில் :

1.  விட்ச்கராப்ட் தந்த்ரா நூலின் மதிப்பு
2.  இந்த பாட திட்டத்தின் ஒளிநாடாவின்  மதிப்பு
3.  வேதங்களின் பெருமை
4.   செயல்களின் முக்கியத்துவம் .
5.   தாந்திரீகத்தின் எல்லை , உழைப்பின் பெருமை
6.    தாந்திரீக பரிகாரங்கள் அஷ்டகர்ம வித்தைகளின்  எல்லை
7.    அக பூஜையை ( உபாஸனையை ) பெருமை படுத்தும் வேதத்தின் கட்டுமான அமைப்பு
8.    அக  பூஜையின் முக்கியத்துவம்  





Monday, February 27, 2017

மாந்திரீகர்களும் புரட்டுகளும் - மிருக பலி காரிய சித்திகள் தரும் ?-புரட்டு







ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இந்த ஒளிநாடாவில் தாந்திரீகர்கள் மூட தனமாக ( ரிஷிகள் இயற்றிய மூல நூல்களுக்கு புறம்பாக ) , காமிய கிரியைகள் ( நம் இச்சைகளை பூர்த்தி செய்ய ) செய்ய படும் மிருக பலியை பற்றி பேசிஉள்ளேன் . பிற கலாச்சார வழிபாடுமுறைகளை பற்றி இங்கு நான் குறைகூறவில்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கின்றேன் -( சில மூடர் கூட்டம் இதையும் தீரித்து பேசும் )

தாந்திரீக சக்திகளால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டு இருக்கின்றது , இது உலகம் முழுவதும் நிரம்பி இருக்கின்றது இது பாரபட்சம் அற்றது , அனைவருக்கும் ஒரே மாதிரியான அருளை ( தேசம் , கலாச்சாரம் சார்ந்து அல்லாமல் ) தான் இது வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது . இந்த சக்திகளை தன் வளர்ச்சிக்காக மற்றும் சமுதாய வளர்ச்சிக்காக பிரயோகம் செய்பவரைதான் நாம் தாந்திரீகர் என்று கூறுகின்றோம் . அணைத்து தேசத்திலும் சிறந்த தாந்திரீகர்கள் இந்த பணியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்

ஆனால் இந்த சக்தியை நாம் எளிதாக பிரயோகம் செய்ய இயலாது . இதற்க்கு சில பிரபஞ்ச கோட்பாடுகள் ( விஞ்ஞான மற்றும் மெய்ஞ்ஞான தத்துவங்கள் ) பற்றின தெளிவு முக்கியமாக அனுபவம் சார்ந்த அனுபூதி அடைய வேண்டும் , அதை தவிர்த்து நாம் மிருகத்தை போல் வாழந்து இந்த சக்தியை பெற்று விடலாம் அல்லது நாம் இந்த சக்திகளை பிரயோகம் செய்து நம் தரத்தை உயர்த்தி கொள்ளலாம் என்பது அறியாமையின் உச்சகட்டம் .

தாந்திரீக கோட்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சில மூடர்கள் அர்த்தமற்ற கிரியைகளை செய்து இந்த சக்திகளை தன் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்கள் . இதில் பிரதானமான ஒன்று தான் மிருகபலி .

தன் உழைப்பை நம்பாமல் , சோம்பல் என்ற ஒரு கொடிய நாகத்தால் தீண்ட பட்டு , மிருக வாழ்க்கை வாழும் சில போலி தாந்திரீகர்கள் எளிமையாக நாம் சித்திகள் அடைந்து விடலாம் என்ற ஒரு மூட நம்பிக்கையில் இந்த கிரியையை தானும் சையது , மற்றவர்க்கும் செய்ய போதனை செய்கின்றார்கள் , அதாவது குரங்கு தானும் கேட்டு , வனத்தையும் கெடுக்குமாம் அதை போல .

இன்றைய பாடத்தில் :

1. மிருக பலி சில புராணங்களில் சொல்ல பட்டு உள்ளேதே ஏன் ?
2. ஈசான பீஷ்மர் அவர் உடலில் இருந்து இரத்தத்தை எடுக்கின்றார் , இது ஏன் ?
3. பலி கொடுக்க பட்ட மிருகத்தின் இரத்தம் , சதை போன்றவை இறைவனுக்கு ஏற்றதா ?
4.நான் செய்யும் இரத்த கிரியையின் அடிப்படை இரகசியம்
5. இராமாயணத்தில் ஒரு இரகசியம்
6. மிருகங்களை பலி கொடுக்காமல் அவர்களின் சக்தியை பிரயோகம் செய்ய வழி உண்டா ?

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&