Saturday, July 9, 2016

இரத்ததின் மாபெரும் சக்திகள்-பாகம்-2

ஓம் நம சிவாய

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இரத்ததின் மாபெரும் சக்திகள்-பாகம்-2
MOTIF -3 ( SECREATIONS ) விரைவில் ---------------------
மிக சக்தி வாய்ந்த தாந்திரீக பிரயோக முறைகள் ...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எச்சரிக்கை :
****************
பிராண சக்தியை பரிமாறி கொள்வது , உறிஞ்சுதல் மிகவும் ஆபத்தான செயல் ; இங்கே கொடுக்க பட்டு உள்ள விஷயம் ஒரு உதாரணம் மட்டுமே ; இதில் பல சூட்சுமங்கள் அடங்கி உள்ளது ; தக்க பயிற்சி இல்லாமல் இதை பிரயோகம் செய்தால் மிக விபரீத விளைவுகள் ஏற்படும்
நேற்றைய பதிவில் நாம் இரத்தத்தில் சக்தியை பற்றிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம் ; ஸ்தூல பிரோயோக முறைக்கு ஒரு உதாரணம் பார்த்தோம் ; இன்று சூட்சும பிரயோக முறையின் சில இரகசியங்களை பார்ப்போம்.
நேற்றைய பதிவில் , நாம் இரத்ததில் தன்மையான காந்த சக்தியை வெளிப்படுத்துவது , ப்ராணசக்தியின் இருப்பிடமாக அமைவது என்று பல தன்மைகள் இந்த இரத்ததிற்கு இருக்கின்றது என்று பார்தோம் ; இன்று சூட்சும பிரயோக முறையில் எப்படி இந்த இரத்தத்தின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம் .

இதில் பல பிரயோக யுத்திகள் உள்ளது
1. தொடுதல்
2.பார்த்தல்
3. பூசை செய்தல்
4.தகரகாசம் ( ஒரு வித கனவு நிலையில் )
5. சந்தித்தல்

நாம் இப்பொழுது சந்தித்தல் யுத்தியை கொண்டு ஒரு உதாரணம் பார்ப்போம்
சூட்சும பிரயோக முறையில் இந்த இரத்ததில் இருக்கும் பிராண சக்தியை நம் தந்திர பிரயோக முறைகளில் பயன்படுத்தலாம் . இந்த பிராண சக்தியின் விஸ்வரூபம் தான் மனிதனின் சூட்சும சரீரம் (Aura) , என்று அழைக்கப்படுகின்றது ; இதை நாம் பயன்படுத்த , இயக்க , உற்பத்திசெய்ய கற்றுக்கொண்டோமானால் நாம் பல சித்துக்கள் நிகழ்த்தலாம் .எப்படி ஸ்தூலமாக அடுத்தவரை வச படுத்த முடியுமோ , இந்த சூட்சும பிரயோக முறைகொண்டும் அதை செய்யலாம் . ப்ராணசக்தியை பிறரிடம் இருந்து அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் உரியலாம். இந்த சக்தியை நம் மந்திர / தந்திர பயிற்சிக்கு பிரயோகம் செய்து கொள்ளலாம் . 

ஒரு குறிப்பிட்ட மனோ இயக்கமும் , உடல் அமைப்பையும் கொண்டு நாம் விரும்பியவாறே பரான சக்தியை இயக்கலாம் .இந்த சூட்சும பிரயோக முறை பல வழிகளில் செயல்படுத்தபடுகின்றது ; அதில் ஒரு முறையை காண்போம்.
**********************************************************************************
இந்த பகுதியில் கொடுக்க பட்டு உள்ள பிரயோகம் சித்தி ஆக சில பயற்சி முறைகள் உள்ளது , அதை கற்று கொண்ட பிறகு இதை செய்தால் இந்த பிரயோக முறை எளிதில் சித்தி ஆகும்
***********************************************************************************
ஒரு தகுதியான நபரை தேர்ந்து எடுங்கள் (இந்த நபர் நல்ல உடல் விலமை , மனோ வலிமை உள்ள நபராக இருந்தல் அவசியம் ; இல்லை என்றால் அவர்களின் நோயை , மன கோளாறுகளை நாம் நம் சூட்சும சரீரத்தில் இணைத்திட வாய்ப்பு உள்ளது மிகவும் எச்சரிக்கையாக செயல் படவும் )அவரின் தொப்புள்க்கு ( Belly button ) மேல் நான்கு கட்டை விரல் இடைவெளியில் ஒரு சக்தி இயக்க புள்ளி உள்ளது இதை CV12 என்று அழைப்பார்கள் . இந்த சக்தி இயக்க புள்ளியை கூர்ந்து கவனியுங்கள் , உங்கள் மனத்தால் உங்கள் புள்ளியின்(CV12) வாயிலாக ஒரு வெண்மை நிற வெள்ளி குழாய் அல்லது பாம்பு ஒன்று புறப்பட்டு அவர்கள் சக்தி இயக்க புள்ளியில் பாய்வதாக பாவனை செய்யுங்கள் . பிறகு ( அவர்களில் பிராண சக்தியை உறிய ( இங்கே ஒரு நுனுக்கமான இரகசியம் உள்ளது அது நேரில் சொல்லிதரப்படும் ) ; நான் காட்டியுள்ள அம்பு போல உள்ள முத்திரையை உங்கள் தொப்புளுக்கு கீழ் மூன்று விரல் இடைவெளியில் அமைந்திருக்கும் புள்ளியில் வைத்து சற்று நேரம் உங்கள் இணைப்பு உறுதிசெய்யப்பட்டதாக உணரவும்.
பிறகு நான் காட்டியுள்ள இரண்டாவது முத்திரையை அதே புள்ளியில் வைத்து அவர்களின் பிராணசக்தியை , நீங்கள் மூச்சை இழுக்கும் பொழுது இழுக்கவும் , மூச்சை விடும் பொழுது உங்கள் சூட்சுமசரீரம் பிராணன்னால் நிரப்ப படுகின்றது என்று உணரவும். சிறிது நேரம் சென்றவுடன் நீங்கள் முத்திரையை வைத்துள்ள புள்ளியின் பகுதியில் உஷ்ணம் இருப்பதை உணர்வீர்கள் இது நீங்கள் தேவையான பிராண சக்தியை பெற்றுவிட்டீர்கள் என்பதற்கு அறிகுறியே ஆகும் . உஷ்ணத்தை உணர்த்த பின் , முத்திரை காட்டுவதை நிறுத்தி வீட்டு , குழாயை எடுத்துவிடவும் ; முத்திரை வைத்த இடத்தில் வலது கையின் மேல் இடது கையை வைத்து அந்த இடத்தை அடைந்துவிட்டதாக (SEAL )பாவனை செய்யுங்கள் இப்பொழுது உங்களுக்கு தாந்திரீக கிரியை செய்ய போதுமான பிராணசக்தி இருப்பு உள்ளது .

இந்த பிரயோக முறையை அந்த நபர் இல்லாமையும் செய்யலாம் , இதை பற்றி பிறகு பார்ப்போம்.
இந்த முறையை வெற்றிகரமாக ,மிகவும் சக்திவாயந்ததாக மாற்ற சில எளிய நித்திய பயிற்சிகள் உள்ளன ; மேலும் தெரிந்து கொள்ள . இதில் பல நுணுக்கங்கள் உள்ளன அதாவது சரியான நபர்களை தேர்ந்து எடுப்பது , இதை செய்ய தக்க உடல் / மன அமைப்புக்கு வருவது ,அவர்களின் ( சூட்சும)சரீரத்தின் செயல்பாடுகளை உணர்ந்து அதற்கு ஏற்றால் போல் இந்த கிரியை செயல்படுத்துவது . இந்த இணைப்பை கொண்டு நீங்கள் அவர்களின் பிரான்சக்தியை மட்டும் அல்ல , உங்களின் பிராண சக்தியையும் அவர்களுக்கு கொடுக்கலாம் , உங்கள் கட்டளைகளை அவர்களை நோக்கி செலுத்தலாம் ; ஒரு தேவத்தையை ஆவாஹனம் செய்து அவர்களிடம் செலுத்தலாம்
நம்மை அறியாமல் , நம பிராண சக்தியை திருடும் நபர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள / பலப்படுத்தி கொள்ள இந்த மூன்று முத்திரைகளையும் தினம்தோறும் பத்து நிமிடங்கள் செய்து வாருங்கள் , உங்கள் மனமும் , உடலும் பலம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள்
தொடரும் ....



ஓம் நம சிவாய