Wednesday, July 6, 2016

தாந்திரீக இரகசியங்கள் பாகம்-1

ஓம் நம சிவாய
**********************
*********************

தாந்திரீக இரகசியங்கள் பாகம்-1
***********************************************
***********************************************

பிரபஞ்சம் முழுவதும் தாந்திரீக சக்திகளால் நிறைந்து இருக்கிறது . இதை எப்படி வேண்டுமானாலும் - பஞ்ச பூத சக்தி எனும் , பிரபஞ்ச சக்தி எனும் , இறை சக்தி என்னும் நாம் கூறிக் கொள்ளலாம் . நாம் எல்லோரும் உலகில் பிரபஞ்ச சக்திகளின் வெள்ளத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் , நாம் நம்மைச் சுற்றிலும் இருக்கும் மகா சக்திகளை உணரும்போது நாம் நம் உணர்வு என்கிற ஏரியல் கம்பியை அச்சக்திகள் நம்மால் பரவச் செய்து பலவிதமான வழிகளில் அது நம்மிடம் பரவி அதை உணர்ந்து அதன் அற்புத ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .

மேஜிக் என்னும் தாந்திரீக சக்திகள் அடங்கிய உலகமானது உங்களுக்கு புதுமையாகத் தெரியலாம் . தாந்திரீக சக்திகள் என்பது மதம் சார்ந்தோ , மார்க்கம் சார்ந்தோ இருப்பதில்லை , இந்த தாந்தரிக சக்திகளைப் பயன்படுத்தி பல அற்புதங்களை நிகழ்த்த மதங்களும் மார்கங்களும் சிறந்த கருவிகளாக இருக்கின்றன.

உலகில் பிறந்த மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவும் வசதியாக வாழவும் ஆசை படுகின்றார்கள் ; ஆனால் பிரச்சனைகளை ஏதாவது ஒரு ரூபத்தில் சந்திக்கின்றனர் . அதை தீர்த்து கொள்ள ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்கின்றனர் . இதற்காக பெரும்பாலான மக்கள் ஆன்மிகத்தேயே நாடுகின்றன. ஆனால் இந்த முயற்சியை அவர்கள் செய்யும் பொது பெரும்பாலான சந்தர்ப்பத்தில் திருவினை ஆகாமல் தோல்வியில் முடிகின்றது .

முழுமை அடைந்த விஞ்ஞானமே மெய்ஞானம் ; இப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் எவரும் தோல்விக்கான காரணிகளை ஆய்வு செய்யவில்லை ? . கேள்வி கேட்டாள் பதில் கிடைத்து விடும் ; ஆனால் நாம் கேட்பதில்லை ; இந்த தவறுதான் அனைத்து விதத் தவறுகளுக்கும் காரணமாய் அமைகிறது
மதங்களும் மார்கங்களும் நம்முழ் சில அற்புதங்கள் நிகழ சில கோட்பாடுகளை வகுத்துக் கொடுக்கின்றன ; இக்கோட்பாடுகள் யாவும் வரைபடங்களே தொகுதிகள் அல்ல(Map is not the territory). வரைபடங்கள் எல்லாம் தொகுதிகள் என்று நம்பி கிரியைகள் செய்கின்றோம் அதனால் பல நேரங்களில் தோல்வியையும் . சில நேரங்களில் ( காகம் உட்கார பணம் பழம் விழுந்தது போல் ) வெற்றியையும் பெறுகின்றன .

உலகில் பல இடங்களில் அமானுஷ்யங்களும் , அற்புதங்களும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் அதிசயங்களை பலர் நிகழ்த்துகின்றனர் . இது மதம் சார்ந்தோ அல்லது மதத்தைச் சாராமழோ நிகழ்கின்றன . இதை அவர்கள் எப்படி சாதித்தார்கள் , அதற்கான காரணிகள் என்ன என்று நாம் தேடும் பொது
 நமக்கு கிடைக்கும் சில விடைகள் :

1.தங்க தகட்டில் ஒரு தேவதையின் அக்ஷரங்களை எழுதி , அதை ஒரு லட்சம் முறை மூல மந்திரத்தை ஜபம் செய்தால் சித்தியாகும் என்றும் ?
2. பெயர் தெரியாத ஒரு செடியை போகமுடியாத இடத்துக்கு சென்று பறித்து கொண்டு வந்து , செய்ய முடியாத பூசையை செய்யும் படி செய்து அடைய முடியாத செல்வதை அடையலாம் என்றும் ?
3. தேவதை உபாசனை பல வருடங்கள் செய்தால் தமக்கு வசியமாகும்; அதனால் பல வித்தைகளை சாதிக்கலாம் என்றும் ?
4. சித்தி பெற்ற ஒருவருக்கு பல வருடம் கூஜா தூக்கி , அவர் ஒரு நாள் தன்னை தீண்டும் போது தனக்கும் சித்திகள் கிடைக்கும் என்றும் ?
5. கடுமையான யோகப் பயிர்சிகள் , செய்ய காட்டிற்க்கு சென்று ஊண் , உறக்கத்தை விட்டு வீடு, மனைவி ,மக்களை, விட்டு பல சித்திகளை அடைந்து விடலாம் என்றும் ?

நீங்கள் பல புத்தகம் மூலமாகவும்  பல மனிதர்கள் மூலமாகவும் படிப்பினை பெற்று இருப்பிர்கள் நான் என் வாழ்வில் தாந்திரீக சக்திகளை பயன்படுத்தும் , மிக அற்புதமான மனிதர்களை சந்தித்து உள் ளேன் , சாதித்தவர்கள்களின் யாறும் மேற்கண்ட வழிகளைப் பின்பற்றுவதில்லை , இவர்களில் ஒருவர் கூட இந்த வழிகளைப் பின்பற்றுவதில்லை  ;இவர்கள் எப்படி தாந்திரீக சக்திகளை தன் வளர்சிக்காகத் தன் வசம் ஆக்கிக் கொண்டா ர்கள் ? மற்றவர்க்கு இச்சாதனைகள் எட்டாக்கனியாக இருக்கின்றன அது ஏன் ?

இதற்கான விடையைத் தேடுவோம்

தாந்திரீக சக்திகளின் அடிப்படைக் கோட்பாடுகளை (Fundamental Building Blocks) புரிந்துக் கொண்டால் , நாம் வரைபடங்களை விடுத்து தொகுதிக்கு சென்றால் , நாம் இந்த உத்திகளைக் கொண்டு வாழ்கையில் வெற்றி பெறலாம் . நமக்கு தெரிந்த சில அடிப்படையான மேஜிக் சார்ந்த உதாரணங்களைத் தருகின்றேன் அதை வைத்து சில ஆய்வுகளைச் செய்வோம் . மேஜிக்கின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும் என என்னார்தீர்கள் இது வார்த்தை ஜாலத்தால் புதுமையாக தோற்றம் அளித்தாலும் இது போன்ற செயல்கள் நமது அன்றாட வாழ்வியலில் பின்னி கிடக்கின்றது .

உதாரணம் -1
*******************
ஒருவனின் உடல் நிலை சரியில்லை என்றும் அவனின் உடல் நிலை சரியாக அவன் தலையில் உள்ள தலை முடியில் 7 முடியை மட்டும் எடுத்து வந்து நன்றாக வளர்ந்த ஆலமரத்தில் ஒரு துளையிட்டு , அதில் அந்த முடியை வைத்த பிறகு , துளையிடும் போது வீழ்ந்த துகள்களை கொண்டே மூடி சாணத்தை வைத்து மறைத்து விட்டு வந்தால் சிறிது நேரத்தில் அந்த ஒருவனின் உடல்நிலையில் விறுவிறு என்று முன்னேற்றம் தெரிகிறது .
உதாரணம் -2
*******************
ஒரு குழந்தை தொடர்ச்சியாக அழுகின்றது . வீட்டில் ஒரு எலுமிச்சம் பழத்தைத் எடுத்து குழந்தை மேல் தடவி இடம் வலம் என்று மும்மூன்று சுற்றி முச்சந்தியில் விசினால் (அ ) புதைதுவிட்டாலோ அக்குழந்தை சற்று உற்சாகநிலை அடைந்து விடுகிறது
உதாரணம் -3
*******************
சில நாட்களாக தொடர்ந்து வீட்டில் உள்ளவர்க்கு சோர்வும் சில தடைகளும் எதிர் நோக்கினால் , வீட்டில் உள்ள பெரியவர்கள் , ஒரு கற்பூரக் கட்டியை எடுத்து அவ்வீட்டில் உள்ள அனைவரையும் உட்காரவைத்து கற்பூர கட்டியை ஏற்றி வலம் இடமாக மும்முறை சுற்றி வீட்டிற்கு வெளியில் வைத்து விட , சில நாட்களில் நிலைமை சீராகி விடும் .
உதாரணம் -4
********************
ஒருவன் தன் எதிரியை வீழ்த்த வேண்டும் என்று எவன் அணிந்த துணி, அவன் காலடி மண் , அவனுடைய நகம் மயிர் என்று எது கிடைத்ததோ அதை கொண்டு ஒரு பொம்மை தயார் செய்து அந்த பொம்மையை கொண்டு போய் சுடுகாட்டில் புதைத்து விட்டால் , அந்த எதிரிக்கு பல இன்னல்களும் தடைகளும் ஏற்படும் .
உதாரணம் -5
*******************
ஒருவன் தனக்கு ஏற்பட்ட காயத்தில் சலம் (சீல்) கோர்த்து இருந்தால் அதை ஒரு துணியில் எடுத்து துடைத்து அந்த துணியை காப்பர் சல்பேட்டில் போட்டு விட்டால் அவனுக்கு உள்ள காயம் சரியாகிவிடும் .
உதாரணம் -6
*******************
ஒரு புரோகிதர் ஒரு கர்த்தாவிற்கு அவனின் உபாதைகளை சரி செய்ய அவனுடைய நட்சத்திரம் , பெயர் , லக்னத்தை கொண்டு சங்கற்பம் செய்து பூசை ஹோமம் நிகழ்த்தி அவரின் இடையூறுகளை நீக்குகின்றார் .
உதாரணம் -7
*******************
ஆலயத்தில் , மக்களின் கூட்டு பிராத்தனையின் பொது ( திருவாசக முற்வோதுதல் ) , ஒரு நபருக்குகாக பிராத்தனை செய்யும் பொது அந்த நபருக்கு குணமடைகிறது.
உதாரணம் -8
*******************
ஒரு தாந்த்ரிகர் கிரஹ நிலைகளை ஆய்வு செய்து தகுந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தியோடு தன்னை தொடர்பு படுத்திக் கொண்டு கர்த்தா ஒருவருக்கு காரியம் சாதித்து தருகிறார் .
உதாரணம் -9
********************
திருமூலரின் திருமந்திரத்தில் பல தாந்திரீக இரகசியங்கள் உள்ளது , அவை சூத்திரங்களாக உள்ளது அதை சரியாக புரிந்து கொண்டால் , இதை பிரயோகம் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்

ஒருவரை உச்சாடனம் செய்ய அவர் சொல்லும் ஒரு கிரியை இந்த பாடலில் கவனியுங்கள் ;உச்சாடனம் என்றால் எவரையும்( தீய மனிதர்களையும் , துர் தேவதைகளையும்) நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.
975 பாடல்

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் - கோவில். காங்கு அருமேட்டில் - வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு - கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு - கடுகு - கடு + கு - சிறுத்தவிடம்.

இந்த ஒன்பது உதாரணங்களில் இருந்து நாம் தாந்த்ரிக சக்திகளை , வெற்றிகரமாக பயன்படுத்த அனைத்து விதிகளையும் எடுத்துக் கொள்ளலாம் .

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
உத்தரவேதம்- 675
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
உத்தரவேதம்- 676
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே சொல்லபட்ட ஒன்பது உதாரணமும் சில பொதுவான தாந்திரீக காரணீகள ்கொண்டே செயல்படுகின்றன அவைகளில் சிலவற்றை நாம்பார்ப்போம்

முதலாவது இடம் நமக்கு என்ன பலன் நிகழவேண்டுமோ அதை உறுதிசெய்யும் விதமாக ஒரு இடத்தை தேர்வ ுசெய்யவேண்டும்
ஏன ்சரியான இடத்தை தேர்வ ுசெய்யவேண்டும்
என் என்றால் நம் கிரியைக்கு சாதகமான பிராண சக்தியை அந்த இடத்தின ்தன்மையின ்பிரதிபலிப்பாய் அந்த இடம் நம்மக்கு வழங்கும் நம்மனமும ்மனோதத்துவரிதியாக தயார்ஆகிவிடும ்நம் ஆழ்மனம் அந்த இடத்தின் தன்மையை குறியீடு விஷிய அறிவாக ஏற்றுக் கொள்ளும் இதனால ்நம ்ஆழ்மனதின ்சக்த ிபிரவாகம் தூண்டபடும்
மேலே சொல்லப்பட்ட உதாரணம் ஒன்பதில் உச்சாடனத்தை அய்யனார் கோட்டத்தில் செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார ்என் அப்படி கூறுகிறார் என்று சிந்தனைசெய்யுங்கள்

நான் அய்யனார் என்று கூறிய உடன ்உங்கள ்மனம் ஒரு உக்கிர தெய்வத்தை கற்பனை செய்துவிடும் ஆழ்மனம ்பாதுகாப்பு தண்டனை க்ரோதம் என்ற குறியீடு விஷயங்களை இதனை பற்றி மேலும் புரிந்து கொள்ள நேரில் தொடர்ப ுகொள்ளவும் பரிணாமித்துவிடும் இதனால் ஆழ்மனத்தில் நமக்கு தேவையான சக்தி இயக்கம் வெளிப்பட்டுவிடும ்மேலும ்சற்று சிந்தியுங்கள் இந்த கோயிலில் எந்த மாதிரி பிராணசக்தி வியாபித்து இருக்கும் இங்கே இந்த கிரியைக்கு தேவையான பிராண சக்தி நிச்சயமாகவியாப்பித்து இருக்கும்

இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நமக்க ுதேவையான ப்ராண சக்தியை மனோஇயக்கத்தை ஐய்யனார ்கோட்டம் மற்றும ்வேறு எந்த இடத்தில் கிடைத்தாலும ்பயன்படுத்திக்கொள்ளலாம்
இடத்தை தேர்வு செய்யும ்முன் அந்த இடத்தை காவல் காக்கும் தெய்வம் அல்லது அந்த கோவிலில ்உள்ள தெய்வம்

உங்கள ்கிரியைக்க ுசாதகமான இயக்க சக்தியுள்ளவரா என்றுஉறுதி செய்து கொள்ளவும் அல்லத ுஅந்த இடம் உங்கள் கிரியைக்கு சாதகமான சூழலில் உள்ளதா என்று உறுதிசெய்யவும்

நாம் எந்த இடத்தை தேர்ந்து எடுத்தாலும் , பிராண சக்தியின் பாத்திரமாக தான் அது செயல் படுகின்றது , பிரபஞ்ச சக்தி இந்த பாத்திரத்தில் நம தேவைக்கு ஏற்ப நிரப்ப கால நேரங்கள் மிகவும் முக்கியம்
சுத்திபோடுவதுபோன்றசிலகிரியைகள்குறிப்பிட்டகாலநேரங்களில்தான்செய்வார்கள்பொதுவாகஇரவுநேரங்களில்செய்வார்கள்இதில்இருந்துநாம்ஒன்றைஅறிந்துகொள்ளலாம்சிலகுறிப்பிட்டகிரியைகளைசெய்யமிகவும்முக்கியஅம்சமாகஇந்தகாலநேரங்கள்உள்ளதுஎன்று
தந்திர கிரியைகளில் சந்திர , சூரிய , பூமியில் இருந்து வர கூடிய கதிர்வீச்சுகளை கொண்டு பல அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்தலாம் .
நாம்இந்தபதிவில்சந்திரனின்ஆதிக்கத்தைபற்றிபார்ப்போம்
மனித இனத்தின் மேல் சந்திரனின் ஆதிக்கம் நிரூபணம் செய்ய பட்ட ஒண்று ;
ஒரு நிருபிக்கப்பட்ட ஆயவை பற்றி பார்ப்போம் :

இனபெருகத்தில் சந்திரனின் ஆதிக்கம்

கரு உருவாதல்
மேற்கு கலிபோர்னியாவிலுள்ள மெதடிஸ்ட ்மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சில ஆச்சரியமான உண்மைகள ்தெரியவந்துள்ளன
ஒரு வருடகாலத்தில் பெண்கள் கருவுறும ்நேரம் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மொத்தம் 11025 கருவுற்ற பெண்கள் பங்கெடுத்தனர் இவர்களில் 8000 பேர் வளர்பிறை காலத்தில் கருவுற்றனர் மீதமுள்ள பெண்கள ்மட்டுமே தேய்பிறை காலத்தில் கருவுற்றனர்

பல பிற உயிரினங்களின் கருவுறுதல் வளர்பிறை அல்லது முழுநிலவு நேரத்தில் மட்டுமே நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுஅரிந்துள்ளனர் . ஆனால் மனிதர்களிலும் கூட பெரும்பாலான பெண்கள் வளர்பிறை காலத்தில்தான் கருவுறுகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம்தான் முதன்முறையாக விஞ்ஞானப்பூர்வமாக நிருபணம் ஆயிற்று .
வளர்பிறை காலத்தில் இணைவதும் , கருவுறுவதுமே இயற்கையானது! தேய்பிறை காலத்தில் இணைவதும் , கருவுறுவதும் இயற்கைக்கு முரணானது! என்பது இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
சந்திரனை பற்றிய மேலும் சில தகவல்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்
நாம் இப்பொழுது ஒருவரை உச்சாடனம் ெய்ய வேண்டும் என்றால் சந்திரனின் நிலையை முக்கியமாக ஆயவு செய்ய வேண்டும் .

நாம் ஸ்தம்பன கிரியை செய்ய முக்கிய புள்ளி ஒன்றை இங்கே கூறுகிறேன் :
சந்திரன் மேஷ ராசியில் 10 -12 டிகிரி என்ற புள்ளியில் பயணிக்கும் பொழுது பூமியில் பல கிரியைகள் செய்ய தேவையான பிராண சக்தி அல்லது இயக்க சக்தி வியாபகமாக பரவி கிடக்கும் ; அதில் ஒன்று ஸ்தம்பனம் ஆகும் .
இந்த பகுதி மேஷ ராசியின் குறியீடு - ஆட்டின் கொம்பு பகுதியில் விழும் , இந்த கொம்பு பகுதி சனி + செவ்வாய் சேர்க்கையை குறிக்கும் . பொதுவாக இந்த பகுதி இருவரை ( காதலர்கள் , கணவன் மனைவி , நண்பர்கள் ) பிரிக்க , தீய நபர் ஒருவரை வேறுஒரு இடத்திற்கு மாற்ற உதவ கூடிய புள்ளியாக செயல் படுகின்றது .

தாந்திரீக ஜோதிடத்தில் மேஷ ராசியில் 10 -12 டிகிரியில் சந்திரன் பயணிக்கும் பொழுது அந்த பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒரு குறியீடாக கீழே கொடுத்துள்ள படத்தை போல் சித்தரித்து உள்ளார்கள் ; இது ஒரு கலாச்சார சித்தரிப்பு தான் ; பிரபஞ்ச சக்தி கலாச்சாரத்தை கடந்து நிற்கின்றது .
மேலும் தெரிந்து கொள்ள: 9840300178
தொடரும் ....




ஓம் நம சிவாய