Thursday, August 4, 2016

நம் வாழ்வில் அதிஷ்ட மழை பெய்ய தாந்திரீக குளியல் பொடி – 1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம் வாழ்வில் அதிஷ்ட மழை பெய்ய தாந்திரீக குளியல் பொடி – 1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(இதில் சக்திவாய்ந்த மூலிகை பிரயோக முறைகள் உண்டு , இன்றைக்கு ஒரு அடிப்படை ( பிரயோகம் செய்து பார்த்ததில் நல்ல பலன் கிட்டியது ) பிரயோக முறையை பார்ப்போம்)


தாந்திரீக குளியல் முறையை கொண்டு நாம் நம்மை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் , காதலில் வெற்றி பெறலாம் , நம் வருமானத்தை உயர்த்தலாம் , சூதாட்டத்தில் வெற்றி வாகை சூட்டலாம் . நம் வாழ்வில் சகல விதமான அதிஷ்டத்தை வசீகரிக்கலாம் , நம் வியாபாரத்தை மேன்மைப்படுத்தலாம் , நம் மனத்தையும் , உடலையும் ஆரோக்கியமாக வைத்திடலாம்

தாந்திரீக குளியல் முறையை சாதரணமாக நினைக்க வேண்டாம் , இதை கொண்டு நம் வாழவில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுவிடலாம் .
தாந்திரீக குளியல் எடுக்க பல முறைகள் உள்ளது ; நாம் எந்த காரணத்திற்காக எடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவுசெய்யபடுகின்றது . தாந்திரீக குளியல் பல கோட்ப்பாடுகளை உள்ளடக்கி உள்ளது , இதில் பல பிரயோக முறைகள் உள்ளது .

தாந்திரீக குளியலுக்கு முக்கியமான சில வழிமுறைகள் உள்ளது அதை பற்றி நாம் வேறுஒரு பதிவில் பார்ப்போம்.
குளியல் என்ற ஒரு சாதாரண கிரியையை நம் ஆசைகளை நிறைவேற்றும் பூஜையாக மாற்றலாம் , இந்த குளியல் முறையில் பல கிரியைகள் உள்ளன அதில் குளியல் பொடி பிரயோக முறை முக்கிய பங்குவகிக்கிறது.
இன்று நம் அதிஷ்டத்தை வசீகரிக்கும் குளியல் பொடி ஒன்றை பார்ப்போம் தேவையான பொருள்கள் :
____________________________
சீயக்காய் - இந்து பங்கு
வெட்டிவேர் - இரண்டு பங்கு
ஆரஞ்சு தோல் - ஒரு பங்கு
ஜாதி காய் - ஒரு பங்கு
____________________________
இந்த பொருள்கள் நாட்டு மருந்து கடைகளில் சூரணம் வடிவில் நமக்கு எளிதாக கடைக்கும் ,இதை நீங்கள் வாங்கி ஒன்றாக கலந்து தேய்த்து குளித்து வாருங்கள் . இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்வில் அதிஷ்ட மழை பொழிவதை நீங்கள் கண்கூடாக காணிப்பீர்கள்
உண்மையான தாந்தீரீகத்தை பற்றி தெரிந்து கொள்ள 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&