Friday, August 26, 2016

அதி அற்புத கபால ( மண்டை ஓடு ) வழிபாடு பாகம்-2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இந்த தொடரில் சொல்லித்தரப்படும் இரகசியங்கள் தாந்திரீகத்தில் பெரும் அறிவும் , ஆறுவமும் உள்ள நபர்களுக்கு மட்டுமே புரியும்

அதி அற்புத கபால ( மண்டை ஓடு ) வழிபாடு பாகம்-2
*******************************************************************************
___________________________________________________
தந்திர மார்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கருவியை பற்றிய இரகசியங்கள்
___________________________________________________

இந்த பதிவில் நாம் மேலும் ஒரு கபால யந்திரத்தை பார்ப்போம் .
ட்ரொட்டில் உள்ள மரண சீட்டை நன்றாக கவனியுங்கள் ; பெருவாரியான ட்ரொட் ஓவியங்களில் கபால மனிதன் கையில் ஒரு கோடாலி ரூபத்தில் கருக்கு அறிவால் வைத்துஇருக்கின்றான் மற்றும் அறுவடைக்கு தயாராக இறக்கும் கதிர்கள் , உங்கள் முயற்சிக்கு ஏற்ற ஊதியம் வரும் வேலை என்று சுட்டி காட்டுகிறது .

கோல் இல்லாத (சரண் அடைந்த)அரசகுரு , கிரீடம் இல்லாத பூமியில் ( வீழ்த்தப்பட்டு ) கிடக்கும் ராஜா நீங்கள் அகத்திலும் / புறத்திலும் அடைந்த பரிணாம வளர்ச்சியை தெளிவாக காட்டுகிறது ; அறிவும் , வீரமும் உங்களிடம் சரண் அடைவதை தெளிவாக காட்டுகிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மகா சுக்கிர பூத யந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த யந்திரம் மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகும் குபேரனின் பூர்ண அருளை நம்மக்கு பெற்று தரும் , சுக்கிர கிரகத்தின் பிரதிபலிப்பாய் இந்த யந்திரம் செயல் படும்

பெரும் பண்பொழிவை உங்கள் வாழ்வில் வரவலிக்க ( அதிர்ஷ்ட பணம் , உழைப்புக்கு ஏற்ற ஊதியம் , நீங்கள் வாழும் தொகுதியில் நீங்கள் ஒரு மிக பெரிய செல்வந்தராக )

வெள்ளி கிழமையில் , சுக்கிர ஹோரையில் ( பகல் பொழுதாய் இருந்தால் உத்தமம் ) ;கீழே கொடுக்க பட்டு இருக்கின்ற கபால யந்திரத்தை ஒரு வெள்ளை பட்டு துணியில் பச்சை நிற மையினால் வரையவும் ; பிறகு இந்த யந்திரத்தை உங்கள் பண பெட்டியில் வைத்து விடவும் , உங்கள் பண பையிலும் ( purse ) வைத்து கொள்ளலாம் .

உங்கள் வாழ்வில் பண(வருவாய் , சொத்து ) மழை பெய்வது உறுதி
இந்த யந்திரத்தை தாமிர தகட்டில் எழுதியும் வைத்து கொள்ளலாம்.
அடுத்த பதிவில் ஸ்படிக்க கபாலத்தின் மாபெரும் இரகசியங்களை நாம் பார்ப்போம்

உங்கள் வாழ்வில் மிக பெரிய துன்பங்களில் இருந்து விடு பெற மிக அற்புத/இரகசிய கபால யந்திரங்களை பயன்படுத்துங்கள் . உங்கள் பிரச்சன்னைக்கு ஏற்ற கபால யந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&


Thursday, August 18, 2016

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள் பாகம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
*******************************************************************************
*******************************************************************************
ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்
பாகம் -2
******************************************************************************
******************************************************************************
முக்கிய குறிப்பு :
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த பதிவில் நான் கொடுத்துள்ள பிரபஞ்ச சார தியானத்தை , தினம்தோறும் செய்து வாருங்கள் , உங்கள் வாழ்க்கை அன்னையின் அருளால் மிக பெரிய ஏற்றத்தை அடையு; இது ஏன் அனுபவம்
"காளி!' இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. நமது பாரத நாட்டில் காளியைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதாவது காளி என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காளியை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.
ஸ்ரீ காளி என்று சொன்னால், உக்கிரமான சக்தி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு, ஸ்ரீ காளி வழிபாட்டை வீட்டில் செய்வதற்குத் பயப்படுகிறார்கள் / தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் நம் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயங்கரி ; ஆற்றலே வடிவான காளியைச் சரணடைந்தால், அவள் நம் பாவங்களையெல்லாம் பொசுக்கி, நாம் நம் லட்சியத்தை அடையச் செய்கிறாள். லோக மாதா ஆவாள் , அவள் அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள்.
வெற்றிகளை அளிப்பவள். காளி காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காளி ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள்.ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமில்லா பெருவாழ்வு தருபவள்.
மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே.
தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள். எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம். ஸ்ரீ காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக... எடுத்த அவதாரம். இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.
இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காளி. ஸ்ரீ காளியின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சி. கொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் ஸ்ரீ காளியை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம். மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.
உத்தரகலாமிருதத்தில் ஸ்ரீ காளி வழிபாடு: உடலில் பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை வரவழைக்கும் ஸ்ரீ காளி வழிபாடு பற்றி ஒரு துதியால் அறிய முடிகிறது.
காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்.
காமேஸ்வரக் கடவுளின் இடது பாகத்தை அலங்கரித்திருப்பவளும், தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அடையாளமாகச் சங்கு சக்கரம் கொண்டு வரம் அளிப்பவளும், பிறை நிலவு தரித்து, பிரகாசமாக விளங்கும் முக்கண்களோடு, சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும், சூரிய வம்சத்தில் பிறந்த விக்ரமார்க்க அரசனைக் காத்து நன்மை தருவதில் அக்கறை உடையவளுமான ஸ்ரீ காளி தேவியை வணங்குவோமாக!’
ஸ்ரீ காளி தேவியை காற்றின் அதிதேவதையாக தந்திர சாஸ்திரங்கள் போற்றுகின்றன சூட்சுமமாக நம் உடலில் பிராண சக்தியின் அதிபதியாகத் திகழும் காளிதேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும். தென் திசைக் காவலனாக விளங்கும் எமதர்மராஜன் காளி என்ற பெயரைக் கேட்டால் விலகி ஓடி விடுவான். தேஜஸ்வினீ, பராசக்தி, பரப்பிரம்ம சொரூபிணி, மோட்சதா, திகம்பரா, சித்விலாசனி, சின்மயி ஆகிய நற்பெயர்களைக் கொண்டவள் காளி இவள் பயங்கரி உக்கிரமானவள் அகோரத்தின் அதிபதி .
ஸ்ரீ காளியை உபாசனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்ற அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்கத் தோன்றும்.
******************************************************************************
இன்று இரண்டாவது படிக்கட்டுணை(காளியின் திவ்ய நாமம் ) பார்ப்போம்.
********************************************************************************
இவளின் சதநாம அரசாணையில் இரண்டாவது நாமம்
%%%%%%%%%%%%%%
ஓம் ஸ்ரீம் கராள்யை நம:
%%%%%%%%%%%%%%
இந்த நாமம் ஸ்ரீ காளியின் காக்கும் , இயக்கும் திறனை பிரதிபலின்றது ; மேலும் இந்த திரு நாமம் சூட்சுமமாக இவள் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களிலும் இயக்க சக்தியாய் இருக்கின்றாள் என்பதையும் உணர்த்துகிறது . இந்த நாமம் அற்புத ஆற்றல் கொண்டது , ஆனால் புதிரானது ; இந்த நாமத்தின் அற்புத ஆற்றலை அவள் அருளால்தான் உணரமுடியும். இந்த நாமத்தில் ஸ்ரீம் பீஜம் உள்ளதை கவனியுங்கள் . இந்த பீஜம் மங்கலத்துவத்தை(குறை அற்ற சக்தி இயக்கம் ) வெளிப்படுத்தும் பீஜம் ஆகும் . இந்த நாமத்தை நீங்கள் தினம்தோறும் ஜபித்தால் உங்கள் வாழ்வு மங்களத்துவம் பெரும்
இந்த பெயரை தினம்தோறும் ஜபித்து வாருங்கள் ; இந்த பெயரை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகள் :
1. உங்கள் சொத்துக்கள் பாதுகாக்கபடும்
2. உடல்நிலை கோளாறுகள் சீராகும்
3.நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் தடை இன்றி சீராக நடைபெறும்
4. உங்கள் பொருளாதாரத்தில் மிக பெரிய ஏற்றம் ஏற்படும்
5. லோக வசியம் ஏற்படும்
6. பிறரின் குறை தீர்க்கும் ஆற்றல் கிட்டும்
அவளை போற்றி அவளின் சக்தி பிரவாகத்தை உங்களுள் அனுமதியுங்கள்; உங்களை மகிழ்விக்கும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஓம் ஸ்ரீம் கராள்யை நம: என்று அவளை போற்றுங்கள் , உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலும் அமையவில்லை என்றாலும் அவளை போற்றுவதற்க்கு இந்த பிரபஞ்சத்தில் பல அச்சரியங்கள் / அற்புதங்கள் இருக்கின்றதது , அதை சிந்தித்து அவளை போற்றுங்கள். நீங்கள் போற்றும் படி உங்கள் வாழ்வில் பல விஷயங்கள் உள்ளன ஒரு உதாரணம் :நீங்கள் உங்கள் உள்ளுறுப்புகளுக்கு நன்றி தெரிவியுங்கள் , அவைகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு ஆக பணிபுரிகின்றது ; லோக மாதா ஸ்ரீ காளி தேவி பிராண சக்தியின் வடிவில் இந்த உறுப்புகளை இயக்குகின்றாள் ; அவளுக்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள் ; அவளை போற்றுங்கள்
இரவு படுக்கும் முன் , இன்று உங்கள் வாழ்வில் உங்கள் கவனத்திற்கு வந்த போற்றத்தக்க சம்பவங்களை பற்றி அவளை போற்றி அன்னைக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் .
இதை நான் மௌனமாக செய்திருக்கின்றேன் ஏன் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்து உள்ளது ; உங்கள் வாழ்விலும் கண்டிப்பாக இவள் பல அற்புதங்களை நிகழ்த்துவாள் .
*********************************
பிரபஞ்ச சார தியானம்
**********************************
இது சுருக்க முறை - இதில் அதி சூட்சுமமான தாந்த்ரீக முறையும் உண்டு
ஸ்ரீ காளியின் முதல் திருநாமத்தை ஜெபத்தை கொண்டு அணுகினோம் ( எல்லா நாமத்திருக்கும் ஜெபங்கள் , தூபங்கள் , தாந்திரீக கிரியைகள் உண்டு நேரம் கருதி அனைத்து நாமத்திருக்கும் சிலவற்றை மட்டும் பதிவிடுகின்றேன் ) ; இரண்டாவது திருநாமத்தை த்யானம் கொண்டு அணுகுவோம்
காலை சூரிய உதயத்துக்கு முன்( சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் ) , எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு , வானத்தை பார்த்து "ஓம் ஸ்ரீம் கராள்யை நம: " என்று மனதிற்குள் ஜபம் செய்யுங்கள் . சூரியன் வாண விளிம்புக்கு மேல் வரும்பொழுது கருநீல நிற வண்ணம் பிரபஞ்சத்தில் இருந்து உங்கள் மேல் பாய்வதாக எண்ணுங்கள் , நான் படத்தில் காட்டியதை போல் கைகளை வைத்து கொண்டு , மேலே கொண்டு சென்று அஞ்சலி முத்திரையை பிரயோகம் செயுங்கள் . தாந்திரீக சாஸ்திரத்தில் காளி இருதய சக்கரத்தில் இருக்கின்றாள் என்று போற்ற படுகின்றது.
இந்த கருநீல வண்ணம் உங்கள் உடல் முழுவதும் ( நாடி , நரம்புகள் , அணுக்கள் ) பரவுவதாக த்யானம் செய்யுங்கள் , சிறிது நேரம் சென்ற உடன் கருநீல வண்ணம் பச்சை நிறமாக மாறுவதாக உணருங்கள்( மலையை தூரத்தில் இருந்து பார்த்தால் கருமையாக தான் தெரியும் , அதன் பக்கத்தில் சென்று பார்த்தால் பச்சை நிறமாக தெரியும் அதே போல் ஸ்ரீ காளியின் அருள் ப்ரவாகத்துள் நீங்கள் முழுமையாக மூழ்கிய பின்பு அவள் உங்கள் அருகில் உள்ளதாக எண்ணி , பச்சை நிறமாக அவள் அருள் சக்தியை பாவனை செய்கிறீர்கள் .
இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் கைகளை பக்க வாட்டில் ( படத்தில் காட்டியதை போல் ) நீட்டி ; அவள் அருளால் நீங்கள ப்ரபஞ்சத்தின் எல்லைகளை கடந்து வளருவதாக எண்ணுங்கள் ; அவள் அருள் சக்தி அமிர்தமாக ( பச்சை வண்ணத்தில் ) உங்கள் உடல் எங்கும் பரவி உங்கள் கோசங்கள் , சரீரங்கள் அனைத்தும் சக்தி அன்னையின் அருளால் பெறுவதாக உணருங்கள் . சிறிது நேரம் இதை அனுபவியுங்கள் . சிறிது நேரம் சென்ற உடன் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுங்கள் . பிறகு ஸ்ரீ காளி மாதாவிற்கு நன்றிகளை மனதார தெரிவியுங்கள் , அவள் உங்களை காலை பொழுதில் அருள் சக்தியால் நிரப்பியதை போல் நாள் முழுவதும் அருள் வெள்ளத்தால் நிரப்பும் மாரு பிராத்தனை செயுங்கள். இந்த பயிற்சி நாள் முழுவதும் ஒருவித சக்தி பிரவாகத்தை ஏற்படுத்தும் . இதை நீங்கள் அதி காலையில் செய்வதால் உங்கள் உடலும் . உள்ளமும் ஒரு புதுமையான பரிணாமத்தில் இயங்க ஆரம்பிக்கும்
இந்த நாமத்திற்கான பூஜை பொருள் இவள் யந்திரம் :
இப்பிரபஞ்சத்தின் இயக்க சக்தியாய் ஸ்ரீ மகா காளி இருக்கின்றாள் ,நம் பூஜையின் இயக்க சக்தியாய் அவள் எந்திரம் அமைந்துள்ளது ;உலகத்தை இயக்கி , அதை பாதுகாத்து எங்கும் வ்யாபகமாக இருக்கும் ஸ்ரீ காளி தேவியை நம்மை ரட்சிக்கும் பொருட்டு , நம் அன்பினால் அவளை ஒரு சிறு சதுர அமைப்பிற்குள் அமரவைக்கின்றோம் (ஒரு தாய் அவள் செய்யை மகிழ்விப்பதற்காக்க விளையாடவுவது போல்). சூரிய ஒளியை லென்ஸ்யை கொண்டு பஞ்சை பற்ற வைப்பது போல் , இவள் ( எந்திரம் லென்ஸை போல் வேலை செய்கின்றது ) எந்திரத்தை கொண்டு நமக்கு தேவையான விளைவுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்
ஸ்ரீ காளியின் யந்திரம் :
********************************
காளியின் வடிவம் ,செயல் , தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப , காளி எந்திரம் , மகா காளி எந்திரம் , தக்ஷிண காளி எந்திரம் , ஸ்மாஷண காளி எந்திரம் ஆகிய இரகசிய எந்திரங்கள் உள்ளன
ஸ்ரீ காளியின் பல எந்திரங்களில் கீழே கொடுக்கபட்டு உள்ள எந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது , இந்த எந்திரத்தை நாம் வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூட்டலாம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள காளியின் எந்திரம் மிகவும் ஆற்றல் மிக்கது , இந்த எந்திரத்தை வைத்து இருப்பவர்களுக்கு குறை இல்லா பெரு வாழ்வு கண்டிப்பாக கிட்டும் . இது ஸ்ரீ தக்ஷினகாளி எந்திரம் , காளிக்கு சேவை செய்ப்பர்வர்களுக்கு கண்டிப்பாக அவள் அவர்கள் விரும்பியதை தக்ஷிணையாக அருள்வாள் .
தக்ஷிண காளியின் பெருமை சொல்லி மாளாதது. இவளுடைய பெருமைகளையும் , மஹிமைகளையும் தந்திர சாஸ்திர நூல்கள் வெகுவாக புகழந்து பேசுகின்றன . அவைகளில் சில தந்திர நூல்களான :
1. மஹா காலசம்ஹிதை
2.மஹா நீல தந்திரம்
3.மஹா நிர்வாண தந்திரம்
4.சக்தி சங்கம தந்திரம்
5.கோடல தந்திரம்
6.நிருத்தர தந்திரம்
7.குலார்ணவ தந்திரம்
8.குல சூடாமணி தந்திரம்
9.காளி குல சூடாமணி தந்திரம்
10.மஹா சீன ஸாரக்ரமம்
11. 11.புரச்சர்யார்ணவம்
12.காலி கற்பூராதிஸ்துதி
13.யோகிநீ தந்திரம்
14.முண்டமாலா தந்திரம்
15.சியாமளா இரகசியம்
என்பவைகளாகும்
இந்த எந்திரத்தின் ஆட்சி தேவதை ஸ்ரீ தக்ஷிண காளி
மூல மந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^
***********************************************************************************
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
***********************************************************************************
இந்த எந்திரத்தை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் ( செப்பு தகட்டில் அல்லது இதை நகல் எடுத்து வைத்துகொள்ளுங்கள் ) , தினம்தோறும் இதை பார்த்து மூலமந்திர ஜபம் செய்யுங்கள் , பிறகு நீங்கள் காளிபூஜையை முழுவதுமாக பயின்ற பிறகு இந்த எந்திரத்தை நுட்பமாக பயன்படுத்தலாம் .
வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் இந்த எந்திரத்தால்






ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Tuesday, August 9, 2016

தங்கத்தின் சூட்சும குறியீடு

ஓம் நம சிவாய

தங்கத்தின் சூட்சும குறியீடு
****************************************
****************************************

தங்கத்தை வீட்டிலேயே தங்கவைக்க

தங்க நகைகள் சேர்கை உண்டாக , அடகு வைத்த நகைகளை மீட்க ; தங்க வியாபாரத்தில் கோடி கட்டி பறக்க ; இந்த குறியீட்டை சூரிய உதயத்தின் வேளையில் சில நிமிடங்கள் பார்த்து வரவும் .

இந்த குறியீட்டை பயன்படுத்த மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகள் உள்ளது ; மேலும் தெரிந்து கொள்ள :9840300178



ஓம் நம சிவாய

அதி இரகசிய முஸ்லீம் தாந்திரீக முறைகள் -பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

அதி இரகசிய முஸ்லீம் தாந்திரீக முறைகள் -பாகம்-1
******************************************************************************
******************************************************************************


ஏன் முதல் குருநாதர் திரு சாகுல் ஹமீது ( திருச்சி ) அவர்களுக்கு இந்த முஸ்லீம் தாந்திரீக பதிவுகள் சமர்ப்பணம் .

நான் பதிவிடும் அனைத்து முஸ்லீம் தாந்திரீக முறைகளும் பிரயோகம் செய்து பலன்கள் நடக்கின்றன என்று உறுதி செய்ததாகும் ; இங்கே பதிவிடும் அனைத்து தாந்திரீக முறைகளும் அபூர்வ பொக்கிஷங்களாகும்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதலில் வெற்றி பெற தந்திர விளக்கு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே .
திருமூலர் திருமந்திரம்
எச்சரிக்கை :
*****************
இதை தவறாக (அடுத்தவர் மனைவி அல்லது காதலியை அபகரிக்க நினைக்கும் ) பயன்படுத்தும் நபரை ஜின் ஜூபககாக கடுமையாக தண்டிப்பார் .
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தந்திர விளக்கு முறை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உங்கள் மனைவி ( அல்லது கணவரின் , காதலியின் ) பயன்படுத்திய துணியில் கீழே கொடுக்கபட்டு உள்ள மந்திர வாசகத்தை குங்குமப்பூ மை கொண்டு எழுதவும் ; பிறகு இந்த துணியில் மேல் வெண்குங்கலிய தூபம் போடவும் . இந்த துணியினால் ஒரு விளக்கு திரீயை உருவாக்கவும் .

ஒரு அகல் விளக்கில் ஆலிவ் எண்ணையை ஊற்றி , அதில் முன்னே தயாரித்த திரியை இட்டு விளக்கு ஏற்றவும்(உங்கள் ஆசையை மெதுவாக கூறிக்கொண்டே (மனைவி என்னை நேசிக்க வேண்டும் / அவள் என்னை விரும்ப வேண்டும்) விளக்கு ஏற்றவும் ) , இரவு நேரத்தில் அவன்/அவள் தூங்கிய பின் ( அல்லது பின் இரவு காலத்தில் ) இதை செய்தால் பலன் விரைவாக நடக்கும் . அரை மணி நேரம் சென்ற பின் விளக்கை மலை ஏற்றவும் . நித்தியம் இதை செய்யவும் , உங்கள் திரீ முழுமையாக பயன்படும் வரை எரிக்கவும்.

உங்கள் கோரிக்கை விரைவாக நிறைவேற , வெண்குங்கலியம் தைலம் உடம்பில் தினம்தோறும் தேய்த்து வரவும் ( அக்தர் போல் பிரயோகம் செய்யவும் )துணியில் எழுத வேண்டிய மந்திர வாசகம்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Saturday, August 6, 2016

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள் பாகம் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
******************************************************************************
ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்
பாகம் -1
*******************************************************************************

கோடானகோடி கற்பங்கள் அடங்கப் பெற்ற காலத்தையே அவள் எடுத்து விழுங்கி தன்னகத்தில் அடக்கின்றமையால் வடமொழியில் "காலி" என்றும் , "காலிகா" என்றும் அழைக்கப்படுகிறாள்.காலி என்பது தென் மொழியில் காளி என்றாகிவிட்டது . அவள் கால ஸ்வரூபிணியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாறுதல்களைச் செய்து வருகிறாள்.

இவள் காலத்தின் வடிவமாக நிற்பதால் , இந்த அண்ட சராசரேமே அழிந்துபோனாலும் , எஞ்சி நிற்பவள் இவள் ஒருத்திதான் . எனவேதான் யாருமற்ற மயானத்தில் நிற்கின்றாள்.

காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிறார்கள். வழிபடும்முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது. இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசனைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி ஸ்ரீ தக்ஷிண காளிகையே என்று நிர்ணயித்துள்ளார்கள்.

தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி. அந்த தக்ஷிண காளிகையின் அருளை வேண்டி நம்மால் முடிந்த முயற்சிகளை செய்து இந்த உபாசனாக்கிரமத்தில் வெற்றி பெறுவோமாக.

ஸ்ரீ காளியின் பெருமையை காமாக்யா தந்திரம் கூறுகையில் ; எந்த வேலை செய்பவனுக்கும் வேலை முடிவில் தக்ஷிணை(செல்வம்) கிடைப்பது போல இந்த காளியை உபாசிக்கின்ற எல்லோருக்கும் கைமேல் பலன் கிடைக்கிறது ; ஆகவே இவள் தக்ஷிணகாளி என்றழைக்கப்படுகின்றாள் .

மேலும் தென்திசையின் கடவுளான சூரியனின் புத்திரன் எமன் காளியின் பெயரை கேட்டவுடன் பீதி கொள்கிறான் , ஆகவே 3 லோகங்களிலும் இவள் தக்ஷிணாகாளி என்று அழைக்கப்படுகிறாள் , எனவே தக்ஷிணகாளியை உபாசிப்பர்வர்களுக்கு இகபர சௌபாக்கியங்களும் எம பயமில்லாத வாழ்வும் கிட்டும்.

ஸ்ரீ காளிமாதா பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள். அவள் கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு பயங்கரி, மிக உக்கிரகமானவள் என்று நினைத்து அவள் உருவப் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.
உண்மைமையில் ஆனந்தமும் பிரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த தேவியைக்கண்டு நாம் சற்றும் பயப்படத்தேவை இல்லை. அவளுடைய தோற்றமும் ஆபரணங்களும் மற்றும் ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸாரமான கருத்துக்களையும் மந்தர சாஸ்திர தத்துவங்களையும் அடிப்படையாக கொண்ட குறிப்புகளாகும்.

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்

நமக்கு அபூர்வ சக்திகளை வழங்கும் ஸ்ரீ காளி தேவியின் தாந்திரீக உபாசனை ; படி படியாக நான் இந்த மாபெரும் வழிபாடு முறையை(சுருக்கம்) உங்களுக்கு முழுமையாக தருகின்றேன் . இதில் விரிவான பூஜை முறை உள்ளது ; இதைமுகநூல் வழியாக சொல்லி தர இயலாது ; அதாவது இது புரிந்துகொள்ள சற்று கடுமையானது ; இதை கற்று கொள்ள விரும்புவோர் நான் சொல்லித்தரும் எளிமையான தாந்திரீக பூஜைகளை செய்து , அவள் அருளை பெற்ற பின் என்னை நேரில் அனுகவும்

இந்த தாந்திரீக காளி வழிப்பாட்டின் சிறப்புகள் :
********************************************************************
1. அனைவரும் இந்த வழிபாட்டை செய்யலாம்

2. நம் வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொள்ளலாம்

3. நம் ஆன்மீக பயணத்தில் வெற்றி இலக்கு என்று சொல்லபடும் முக்தி பெரு அடையலாம்

4. தினம் இந்த பூஜையை செய்ய மிக பெரிய திரவிய செலவு இல்லை

5. குறைந்த நேரத்தில் இந்த பூஜையை செய்து முடிக்கலாம்

6. வீட்டில் இந்த பூஜையை செய்ய எந்த வித கட்டுப்பாடும் இல்லை

ஸ்ரீ காளி தேவியை நாம் வழிபட அவள் சதநாமங்களை(100 பெயர் ) படிக்கட்டுகளாக வைத்துக்கொள்வோம் . நாம் இந்த படிக்கட்டுகளை எரியவாரே அவளை மகிழ்வித்து அவள் அருளை பெற வைக்கும் தாந்திரீக கிரியைகளை படிபடியாக கற்றுக்கொள்வோம்.

நீங்கள் இவள் அருளை எளிதாக பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு , பாரம்பரிய பூஜை முறைகளை சற்று சுருக்கி ; அக வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்துள்ளேன் . சுருக்க பூஜை என்பதினால் , பலன்கள் சொர்ப்பமாக ஏற்படும் என்று எண்ணவேண்டாம் , தாத்திரீக கிரியைகள் அடங்கி உள்ளதால் ; கண்டிப்பாக மிகுதியான பலன்கள் நீங்கள் வியந்து போகும் அளவிற்கு ஏற்படும் .

அவளை வழிபாட்டிற்கு தேவையான பொருள்களை சில பதிவுகள் மூலமாக உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் , அதுவரை நீங்கள் அவள் பெயரின் ஆற்றலை ஜெபத்தின் மூலமாக , மற்றும் தாந்திரீக கிரியை மூலமாக உணர்ந்து ,அவள் சக்தியை உணருங்கள்

காளி வழிபாட்டின் முதல் படிக்கட்டு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#######################
ஓம் ஹ்ரீம் காள்யை நம:
#######################

காளியின் முதல் பெயர் படைப்பின் ஆற்றலை /அதை தொடர்ந்து வரும் வளர்ச்சியையும் குறிக்கின்றது , இந்த பெயர் சர்வ வல்லமை கொண்டது . இந்த பெயருடன் ஹ்ரீம் பீஜம் இணைத்துள்ளதை கவனியுங்கள் . இந்த ஹ்ரீம் பீஜம் பராசக்தியின் இயக்க சப்தம் ஆகும்.

இந்த பெயர் தான் அனைத்து இயக்கங்களுக்கும் பிள்ளையார் சுழி ஆகும்
இந்த பெயரை தினம்தோறும் ஜபித்து வாருங்கள் ; இந்த பெயரை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகள் :
********************************************************************************

1. தடைபட்ட அனைத்து காரியங்களும் , தொடக்கம் / வளர்ச்சி பெரும்

2. நம் ஆழ்மன சக்தி தூண்டபட்டு , நம் வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைய செய்யும்

3. நம் சோம்பலை தவிர்த்து , சுறுசுறுப்பாக இயங்க செய்யும்

4.புதிதாக எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் ( தொழில் , வேலை , திருமணம் , கல்வி ) , நல்ல தொடக்கம் ஏற்பட்டு , விருத்தி அடையும்.

5. ஆன்மீக பயணத்தில் புது பரிணாமத்தை நாம் அடைய ஸ்ரீ காளியின் இந்த பெயர் ஒரு சிறந்த திறவுகோலாக அமையும்

ஸ்ரீ காளி தேவியின் பிரதமை பெயரை ஜபம் செய்யும் முன் நீங்கள் உங்கள் கோரிக்கையை நன்றாக நினைவில் வைத்து கொண்டு மனத்திற்குள் ஒரு முறை சொல்லவும் ( உதாரணம் : ஸ்ரீ காளி தேவியே எனக்கு குழந்தை வரம் தந்து அருளுங்கள் )

இருபத்திஏழு ( மற்றும் நாயக மணி ஒன்று - மொத்தமாக இருபத்தி எட்டு மணி ) மணி கொண்ட ருத்திராக்ஷ மாலை பயன்படுத்தினால் உத்தமம் .சுகாசனத்தில் அமரவும் அல்லது ஒரு நாற்காலியில் முதுக்கு தண்டு நேராக இருக்கும் படி அமரவும் கீழே கொடுக்கபட்டு உள்ள வரிசையின் படி கிரியைகளை செய்ய வேண்டும் :

ஸ்ரீ காளியின் அருளை முழுமையாக நமக்கு கிடைத்திட பயன்படுத்த வேண்டிய தூப கலவை (சக்தி இயக்க தூபம்):

வெண்குங்கலியம் ஐந்து பங்கு , ஏலக்காய் இரண்டு பங்கு , தேவதாரு ஒரு பங்கு , அகில் ஒரு பங்கு ,சந்தனம் ஒரு பங்கு . இந்த பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்றால் , வெண்குங்கலியத்தை ( இது ஸ்ரீ காளிக்கு மிக பரீதமான ஒன்றாகும் ) மட்டும் பயன்படுத்துங்கள்

1.ஸ்ரீ காளியின் மூல மந்திரம் : க்ரீம்
க்ரீம் பீஜம் காளியின் க்ரியா சக்தியை குறிக்கும் , சகல விதமான இயக்கங்களும் இந்த சக்தியை கொண்டே செயல்படுகின்றது . இந்த மந்திரம் எப்படி மின்சாரம் நம் வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களையும் இயக்குகிறதோ , அதே போல் இந்த பீஜம் நம்மில் உள்ள சூட்சும சக்திகளை இயக்கி நம் யோக நெறியில் வெற்றியை பெற்று தரும் .இந்த மந்திரம் காளியின் சக்தி ஸ்வரூபம் ஆகும் ; இந்த மந்திரத்தின் சக்தியால்தான் தேவர்களின் ஆயுதங்களுக்கு சக்தி கிடைக்கின்றது .
இந்த மந்திரத்தை இருபத்திஏழு முறை ஜெபிக்கவும்

2.இந்த ஜெபத்தின் நோக்கம் : குழந்தை செல்வம் கிடைக்க
உங்கள் கோரிக்கை எதை சார்ந்து உள்ளது என்று மனத்தால் சிந்திக்கவும்

3.ஸ்ரீ காளியின் பெயர் : ஓம் ஹ்ரீம் காள்யை நம:
இந்த மந்திரத்தை ஐம்பத்தினாலு முறை ஜெபிக்கவும்

4.உங்கள் ஆசை : மிக விரைவில் எங்களுக்குக் ஒரு அழகான (ஆண் / பெண் ) குழந்தை செல்வம் வேண்டும்
கண்களை மூடி கொண்டு உங்கள் ஆசையை மனதார ஒரு முறை கூறவும் ( மனத்திற்குள் )

5.ஆட்சி செய்யும் கிரகங்கள் : சனி/ராகு
இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை ( நீல நிற ஆடை அணியலாம் , சனி ஓரை காலங்களை தேர்வு செய்யலாம்)

6.உப தேவதையின் மந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
இது கணபதியின் மூல மந்திரம் ; இது சகல விக்னங்களையும் போக்கும் , இது நமக்கு ஏற்பட்டு உள்ள சகல விதமான தடைகளையும் உடைத்துஎறியும் .
ஒன்பது தடவை சொல்லவும்

7.விசேஷ நேரம் ./காலம் : அமாவாசை , வளர்பிறை , மேஷ ராசி , சூரிய உதய வேலை ,கிழக்கு , சனி ஓரை /கிழமை.
இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை , மேலே சொல்லபட்ட நேரங்களில் விசேஷமாக ஜபிக்கலாம்

பூஜை பொருள் :
**********************
இந்த பெயர் (ஓம் ஹ்ரீம் காள்யை நம:) இயக்க சக்தியின் ஆரம்பம் என்று நாம் பார்த்தோம் , இது புனிதத்திலும் புனிதமான பெயர் ; இது ஒரு உயிர் வளர்ச்சிடையும் பெண்களுக்கு கர்பப்பைக்கு சமமாக உவமைபடுத்தலாம் .
நாம் வாங்கும் முதல் பூஜை பொருள் ஒரு கலசம் ( படத்தில் காட்டியதை போல் மண்ணில் செய்ய பட்டதாகவும் இருக்கலாம் ) , இந்த கலசம் ஒரு கர்ப்பப்பை போல் செயல்படும் இதில் நாம் ஸ்ரீ காளியை ஆவாகனம் செய்யது , அவள் அருளை பெற்று மகிழலாம். இது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஆகும் , உலகத்தை தன் கர்ப்பப்பையில் அடக்கி ஆளும் , தாயை , நாம் நம் பூஜையில் இந்த கலசத்தில் ( கர்ப்பப்பை போல் ) அவளை வரவழைத்து அவளுக்கு பணிவிடை செய்கின்றோம்.

நாம் அவள் பெயரை பற்றி பார்க்கும் பொழுது , அதை சார்ந்து உள்ள ஒரு பூஜை பொருளை பற்றியும் இதே போல் வரும் பதிவுகளில் பார்ப்போம்
இந்த கலசத்தில் எப்படி காளியை ஆவாகனம் செய்யலாம் என்று பிறகு பார்ப்போம்( ஒரு காளி பூஜைக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கியபின் நீங்கள் பூஜையை தொடங்கலாம் அதுவரை வெறும் ஜெப யோகம் மட்டும் செய்யுங்கள் ; அவள் அருளை கண்டிப்பாக நீங்கள் பெறுவீர்கள்.

தினம் தோறும் ஏதாவது ஒன்றை புதிதாக செய்யுங்கள் ( புது கதை , கவிதை , சமையல் ) , அது உங்கள் மனத்திற்கும் , உடலுக்கும் சந்தோஷத்தை அளிக்கட்டும் , இந்த மகிழ்ச்சியை லோக மாதா ஸ்ரீ காளி இடம் பரிமாறி கொள்ளுங்கள் , உங்கள் சந்தோஷம் பெருகட்டும்.

ஸ்ரீ காளியின் பிரதம நாம மந்திர பிரயோக ஜெபத்தை நீங்கள் தினம்தோறும் சிறிது நேரம் செய்து வரும் காலங்களில் ; உங்கள் உடம்பிலும் , மனத்திலும் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யுங்கள் , உங்கள் சுற்றி நடக்கும் சம்பவங்கள் வேறு ஒரு பரிணாமத்தை எட்டி உள்ளதை நீங்கள் உணர்வீர்கள் , ஸ்ரீ காளி அன்னை உங்கள் மனத்தை வேறு ஒரு பரிணாமத்தில் இயங்க செய்வாள் , நீங்கள் புதுமையாக பிறந்தது போல் உணர்வு ஏற்படும்
ஸ்ரீ காளியின் தாந்திரீக பூஜையின் இரகசியங்களை தெரிந்து கொள்ள :9840300178




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&




Thursday, August 4, 2016

நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிசாசு , ஏவல் ,ஆவி ) இருந்து பாதுக்காக

ஓம் நம சிவாய

நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிசாசு , ஏவல் ,ஆவி ) இருந்து பாதுக்காக
*************************************************************************************
*************************************************************************************
இரும்பின் சூட்சும குறியீட்டை ஒரு பழைய குதிரை லாடத்தில் ( தானாக விழுந்தது இருந்தால் உத்தமம் ) வரையவும். பிறகு இந்த குதிரை லாடத்தை விட்டின் முன் வாசலில் மாட்டி வைக்கவும் . குதிரை லாடம் கடைக்க வில்லை என்றால் ஒரு இரும்பு தகட்டில் இந்த குறியீட்டை வரையவும்.
துர் சக்தியின் பிடியில் உள்ள ஒரு விட்டில் இதை மாட்டி வைத்தால் ; உடனடி நீவாரணம் கிட்டும்


ஓம் நம சிவாய

நம் வாழ்வில் அதிஷ்ட மழை பெய்ய தாந்திரீக குளியல் பொடி – 1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம் வாழ்வில் அதிஷ்ட மழை பெய்ய தாந்திரீக குளியல் பொடி – 1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(இதில் சக்திவாய்ந்த மூலிகை பிரயோக முறைகள் உண்டு , இன்றைக்கு ஒரு அடிப்படை ( பிரயோகம் செய்து பார்த்ததில் நல்ல பலன் கிட்டியது ) பிரயோக முறையை பார்ப்போம்)


தாந்திரீக குளியல் முறையை கொண்டு நாம் நம்மை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் , காதலில் வெற்றி பெறலாம் , நம் வருமானத்தை உயர்த்தலாம் , சூதாட்டத்தில் வெற்றி வாகை சூட்டலாம் . நம் வாழ்வில் சகல விதமான அதிஷ்டத்தை வசீகரிக்கலாம் , நம் வியாபாரத்தை மேன்மைப்படுத்தலாம் , நம் மனத்தையும் , உடலையும் ஆரோக்கியமாக வைத்திடலாம்

தாந்திரீக குளியல் முறையை சாதரணமாக நினைக்க வேண்டாம் , இதை கொண்டு நம் வாழவில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுவிடலாம் .
தாந்திரீக குளியல் எடுக்க பல முறைகள் உள்ளது ; நாம் எந்த காரணத்திற்காக எடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவுசெய்யபடுகின்றது . தாந்திரீக குளியல் பல கோட்ப்பாடுகளை உள்ளடக்கி உள்ளது , இதில் பல பிரயோக முறைகள் உள்ளது .

தாந்திரீக குளியலுக்கு முக்கியமான சில வழிமுறைகள் உள்ளது அதை பற்றி நாம் வேறுஒரு பதிவில் பார்ப்போம்.
குளியல் என்ற ஒரு சாதாரண கிரியையை நம் ஆசைகளை நிறைவேற்றும் பூஜையாக மாற்றலாம் , இந்த குளியல் முறையில் பல கிரியைகள் உள்ளன அதில் குளியல் பொடி பிரயோக முறை முக்கிய பங்குவகிக்கிறது.
இன்று நம் அதிஷ்டத்தை வசீகரிக்கும் குளியல் பொடி ஒன்றை பார்ப்போம் தேவையான பொருள்கள் :
____________________________
சீயக்காய் - இந்து பங்கு
வெட்டிவேர் - இரண்டு பங்கு
ஆரஞ்சு தோல் - ஒரு பங்கு
ஜாதி காய் - ஒரு பங்கு
____________________________
இந்த பொருள்கள் நாட்டு மருந்து கடைகளில் சூரணம் வடிவில் நமக்கு எளிதாக கடைக்கும் ,இதை நீங்கள் வாங்கி ஒன்றாக கலந்து தேய்த்து குளித்து வாருங்கள் . இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்வில் அதிஷ்ட மழை பொழிவதை நீங்கள் கண்கூடாக காணிப்பீர்கள்
உண்மையான தாந்தீரீகத்தை பற்றி தெரிந்து கொள்ள 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&