Wednesday, April 19, 2017

இலுமினேட்டி கருவி "டரொட்" : பாகம்-1

இலுமினேட்டி கருவி "டரொட்" : பாகம்-1

********************************************************
அமானுஷ்ய டரொட் பிரயோக முறைகள் மற்றும் இரகசியங்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"டரொட்" எனப்படும் தாந்திரீக சீட்டுகள் பல வகைகளில் உள்ளன ; தொடர்ந்து நாம் " ரைடர் வைட் " டரொட் சீட்டுகளை பற்றி பார்க்க போகின்றோம்,
வெளிப்படையாக பார்க்கும் பொழுது டரொட் ஒரு சாதாரண குறியீடுகளால் நிரம்பி இருப்பதை போல் காட்சி அளிக்கும் . ஆனால் ஆழ்மனதிற்கு கட்டளைகளை செலுத்த "சபலிமினல் " குறியீடுகள் " ரைடர் வைட் " டரொட் சீட்டுகள் பலவற்றில் இரகசியமாக வைக்க பட்டுள்ளது .

சுருக்கமாக ."சபலிமினல் " குறியீடுகள் என்றால் என்ன என்பதை பார்ப்போம் . "சபலிமினல் " குறியீடுகள் நம் வெளிமனத்திற்கு தென்படாதவாறு ஆழ்மனதிற்கு நேராக்க கட்டளைகளை செலுத்தும் விதமாக அமைக்க பட்டுஇருக்கும் . இது நம் ஆலமன்த்தில் புதைந்து கிடக்கும் அமானுஸ்ய சக்திகளை தட்டி எழுப்பும் ஆற்றல் உடையது . "சபலிமினல் " யுத்திகளை பற்றி பல நூறு பக்கங்கள் எழுதி கொண்டே போகலாம் ; ஆனால் இந்த பதிவின் நோக்கம் இதுவல்ல .

ரைடர் வைட் டரொட்டில் இருந்து ஒரு உதாரணத்தை பார்ப்போம் :
"செவன் ஆப் கப்ஸ்" என்று அழைக்க படும் ஒரு டரொட் சீட்டை பற்றி இன்று பார்ப்போம் .

"செவன் ஆப் கப்ஸ்" என்ற சீட்டை நாம் தினம் தோறும் இரவு படுக்கும் முன் தாந்திரீக முறை படி பார்த்து அல்லது சிறு தாந்திரிக கிரியை மூலமாக இந்த சீட்டின் ஆற்றலை நம் உள்ளே செலுத்தி கொண்டால் . அனைத்து விதமான கிரக கோளாறுகளின் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம் . நம் வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களையும் வரவழைத்து கொள்ளலாம் . இது இந்த சீட்டின் பொதுவான ஆற்றல் .

அனைத்து டரொட் சீட்டுகளை ஒரு குறிப்பிட பூதாதி தேவதைகள் ஆட்சி புரிகின்றன , அவைகளை நாம் ஆவாகனம் செய்தால் , நாம் ஆச்சரியத்தில் மூழ்கும் அளவிற்கு பலன்கள் நம்மக்கு கிட்டும் . இதில் இன்னும் ஒரு சூட்சுமமும் உள்ளது , ஒரு தனி நபருக்கு உரிய டரொட்டை சரியாக தேர்வு செய்து , அதை அந்த நபர் பிரயோகம் செய்து வந்தால் அவர் வாழ்வில் என்றும் ஏற்றம் தான் .

இன்றைக்கு நாம் "செவன் ஆப் கப்ஸ்" என்று அழைக்க படும் டரொட் சீட்டில் மறைந்து இருக்கும் " சபலிமினல் " குறியீடுகளை பார்ப்போம் . கிழே கொடுக்க பட்டு இருக்கும் படங்களை நன்றாக பார்த்தால் உங்களுக்கு நான் என்ன கூறுகின்றேன் என்பது புரியும் .

தொடரும் ................