Thursday, October 13, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-3

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-3
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

3. <இன்றைய கேள்வி>.

இலுமினேட்டிகள் எந்த மார்க்கத்தை சேர்ந்தவர்கள் ?

இலுமினேட்டிகள் எந்த மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை , இவர்கள் சத்தியத்தை உணர்த்தவர்கள் , மார்க்கம் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது , சத்தியத்தை ஒரு எல்லைக்குள் அடக்க இயலாது.

துறவி மட்டுமே ஞானி என்ற ஒரு மாயையான நிலையை இன்றைய இந்து தர்மவான்கள் உண்டாக்கிவிட்டார்கள். முக்கியமாக காவி கட்டியவன் எல்லாம் ஞானிகள் என்ற தோற்றத்தையும் உண்டாக்கி விட்டனர். ஆனால் உண்மையில் ஞானி என்பவன் யார்? துறவி என்றால் எப்படி இருக்க வேண்டும்?

குறியீடு -1
#############

சட்கோண (ஷட்கோண ) குறியீடு :3
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நம் வாழக்கை பாதையில் வெளிச்சமிடும் ஜ்யோதியாய் திகழும் இந்த சட்கோண குறியீடு ; கீழே படத்தில் கொடுக்க பட்டு இருக்கும் ட்ரொட் துறவி சீட்டை பாருங்கள் , சட்கோண குறியீட்டு ஜ்யோதியை மின்னுவதை காணிப்பீர்கள் ; இந்த ஷட்கோணர்த்திற்கும் ஒளி கொடுக்கும் சூரியனின் மத்தியில் உள்ள தொடர்பை நேற்றைய பதிவில் நாம் பார்த்தோம் .
சத்திய ஞானம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் புதிதாய் பிறக்க வேண்டும் , இங்கே துறவறம் என்பது வாழ்க்கையை துறப்பது அல்ல ; இந்த வாழ்க்கையில் நம் மேல் திணிக்கபட்ட விஷயங்களை துறப்பதுதான் .
இலுமினேட்டி பாதை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பாதை அதே வேளையில் இவைகளை துறக்கும் பாதை , இவர்கள் பாதை நதியின் ஓட்டத்தை போல் அமைந்திடும் .

இந்த துறவி சீட்டை நீங்கள் தினம்தோறும் பார்த்து வந்தால் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு கண்டீப்பாக வரும்

நீங்கள் கடக்கும் பாதையில் இருளை அகற்றி , ஒளியை ஏற்படுத்தும் இந்த குறியீடு , ஆனால் நீங்கள் உங்கள் மேல் திணிக்கப்பட்ட கோட்பாடுகளை அகற்ற தயார் ஆக வேண்டும்

உங்கள் மேல் ஒன்றும் திணிக்க படவில்லை என்று சொல்லுவீர்கள் , அனால் நீங்கள் கேள்வி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அனைத்தும் புரிந்துவிடும்
இங்கே நீங்கள் நம்பும் அளவிற்கு பல திணிப்புக்கள் உள்ளன ,இங்கே ஒரு சிறு உதாரணத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்

பகவதி அம்மன்
**********************
உங்களுக்கு தெரியுமா இந்த தேவதையை சாஸ்திரம் படித்த எந்த ஒரு சிவாச்சாரியாரும் ஏற்று கொள்ள மாட்டார் , சிவனடியார்களும் இந்த தேவதையை ஏற்று கொள்ள மாட்டார்கள் . சாக்தர்கள் ( சக்தி வழிபாடு செய்பவர்கள் ) ஏற்று கோல்பாரா என்றால் அவர்களும் ஏற்கமாற்றற்கள் .
ஹிந்து தர்மம் , சனாதன தர்மம் , வேத நெறி ( மார்க்கம் ) சாஸ்திர பிரமாணம் படிதான் அனைத்து வழிபாடுகளும் இப்போ நடக்கின்றதா ?

ஹிந்து தேவதைகள் என்று கூறபடும் தாந்திரீக தேவதைகள் .இந்த தேவதைகள் எந்த சாஸ்திர பிரமாணத்தை கொண்டு வழிபடுகின்றார்கள் ( ஸ்ருதி -வேத பிரமாணம் )
நேரடி பிரமாணம் ஒன்றை கூட காட்ட இயலாது .

பகவதி அம்மன் என்ற பலரால் சொல்லபடும் தேவதை எந்த வேதத்தில் போற்றப்படுகின்றது ?

பகவதி அம்மன் அங்கீகரிக்கபட்ட எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டு உள்ளது ?

பகவதி அம்மன் எந்த ( 18)புராணத்தில் துதிக்கபடுகின்றது ? ,

புராண காலங்களில் அங்கீகரிக்கபட்ட தந்திர சாஸ்திரங்களில் எந்த சாஸ்திரத்தில் இவரை பற்றி கூறபட்டு இருக்கின்றது ?

ஒரு தேவதையை உருவாக்க இலுமினேட்டிக்களால் முடியும் இங்கே இந்த தேவதைக்கு சக்தி இருக்கின்றதா இல்லையா என்பது இல்லை வாதம் , இந்த தேவதை சாஸ்திரத்தால் ஏற்றுக்கொள்ள பட்ட தேவதையா என்பது தான் வாதம்

நவீன தாந்தீர்கள் உருவாக்கியதுதான் இந்த ( தேவதை ) இவர்கள் சுட்டி காட்டும் ஆதாரம் பல சாக்தர்கள் ( சக்தி வழிபாடு செய்யும் தாந்திரீகர்களால் ) நிராகரித்து உள்ளார்கள் தாந்திரீக முறை ( சைக்கோ ஸிம்போலஜி , ஏவல் தந்திரம் ) படி பார்த்தல் இந்த தேவதைகளுக்கு சக்தி இருக்கும் , ஆனால் இவைகள் வேத நெறி , சனாதன தர்மம் , ஹிந்து மார்க்கம் ( மதம் ) போற்றப்படும் தேவைதைகள் அல்ல. குறிப்பு :பலரால் அங்கீகரிக்கபடாத உபநிஷட்ஸ் , சில உபபுராண கதைகள் இருந்து சிலவற்றை காட்டுவார்கள் அவை அனைத்தும் உட்சொறுகள்கள் தான்
சத்தியத்தை உணர்ந்தாள் நமக்கு தேவையான மாற்றத்தை எளிதாய் நாம் உருவாக்கிக்கொள்ளலாம் ; நீங்கள் புதிய பாதையை உருவாக்கி கொள்ளலாம்

மகாலக்ஷ்மி சட்(அஷ்ட)கோண யந்திரம்
***********************************************
இந்த யந்திரத்தை வர்ண நகல் எடுத்து உங்கள் பண பெட்டியில் வைத்து பாருங்கள் , உங்கள் பண பேட்டி பணம் இழுக்கும் காந்தமாக மாறிவிடும்
வெளியே இருக்கும் அஷ்ட திக்கு ( அஷ்ட லட்சுமி இருப்பிடம் ) , உள்ளே ஷட்கோணம் விரிந்து எட்டு கோணம் ( எட்டு லட்சுமி அருளை கொடுக்கும் ) என்று உருவெடுத்து உள்ளதை கவனிக்கவும்








ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&